ETV Bharat / state

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? - TNPSC GROUP 4 Exam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 9:13 PM IST

Updated : Jun 9, 2024, 12:11 PM IST

TNPSC Group 4: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் எழுத உள்ளனர்.

TNPSC
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) நடைபெறுகிறது. இந்தாண்டு தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் - 108, இளநிலை உதவியாளர் - 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க் - 3, தனி செயலாளர் - 4, இளநிலை நிர்வாகி - 41, வரவேற்பாளர் - 1, பால் பதிவாளர் - 15, ஆய்வக உதவியாளர் - 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வனப் பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6,244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருக்கும் நிலையில், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் (M.Phil) முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் கொள்குறிவகை தேர்வாக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டுமெனவும், காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை தேர்வு அறையில் இருக்க வேண்டும்.

இத்தேர்வில், பொது தமிழ் பகுதியிலிருந்து 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

38 மாவட்டங்களில் 7,247 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்து36 ஆயிரத்து 774 பேர் எழுதவுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வர்களுக்குப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்வுக்கூடம் மற்றும் அறைகளுக்கு கால்குலேட்டர், கைக்கடிகாரம், மோதிரம் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவு கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், கைப்பை, கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு வரக்கூடாது.

அவ்வாறான பொருட்களை வைத்திருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் அவ்விடத்திலேயே முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

அனுமதிக்கப்பட்ட எழுது பொருட்களான பேனா தவிர வண்ண எழுது கோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், தனித்தாள்கள், கணித மற்றும் வரைபட கருவிகள், மடக்கை அட்டவணை, பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது.

மேலும், கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வுக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டாம். தேர்வு எழுதும் அறையில் மற்ற விண்ணப்பதாரர்களுடைய விடைத்தாள்களிலிருந்து பார்த்து எழுதுதல் மற்றும் ஏதேனும் முறையற்ற உதவிகளைப் பெறவோ அல்லது பெற முயற்சிக்கவோ அத்தகைய முறையற்ற உதவிகளை தரவோ, தர முயற்சிக்கவோ கூடாது.

மேலும், தேர்வர் தவறான நடவடிக்கையிலோ அல்லது தேர்வினை சீர்குலைக்கும் நோக்கத்திலோ, பணியில் அமர்த்தப்பட்டுள்ள அலுவலர், பணியாளர்களைத் தாக்கும் முயற்சியிலோ ஈடுபட்டால் தேர்வர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விதிமுறைகளின்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: “நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - ANBIL MAHESH POYYAMOZHI

சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) நடைபெறுகிறது. இந்தாண்டு தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் - 108, இளநிலை உதவியாளர் - 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க் - 3, தனி செயலாளர் - 4, இளநிலை நிர்வாகி - 41, வரவேற்பாளர் - 1, பால் பதிவாளர் - 15, ஆய்வக உதவியாளர் - 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வனப் பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6,244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருக்கும் நிலையில், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் (M.Phil) முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் கொள்குறிவகை தேர்வாக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டுமெனவும், காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை தேர்வு அறையில் இருக்க வேண்டும்.

இத்தேர்வில், பொது தமிழ் பகுதியிலிருந்து 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

38 மாவட்டங்களில் 7,247 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்து36 ஆயிரத்து 774 பேர் எழுதவுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வர்களுக்குப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்வுக்கூடம் மற்றும் அறைகளுக்கு கால்குலேட்டர், கைக்கடிகாரம், மோதிரம் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவு கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், கைப்பை, கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு வரக்கூடாது.

அவ்வாறான பொருட்களை வைத்திருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் அவ்விடத்திலேயே முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

அனுமதிக்கப்பட்ட எழுது பொருட்களான பேனா தவிர வண்ண எழுது கோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், தனித்தாள்கள், கணித மற்றும் வரைபட கருவிகள், மடக்கை அட்டவணை, பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது.

மேலும், கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வுக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டாம். தேர்வு எழுதும் அறையில் மற்ற விண்ணப்பதாரர்களுடைய விடைத்தாள்களிலிருந்து பார்த்து எழுதுதல் மற்றும் ஏதேனும் முறையற்ற உதவிகளைப் பெறவோ அல்லது பெற முயற்சிக்கவோ அத்தகைய முறையற்ற உதவிகளை தரவோ, தர முயற்சிக்கவோ கூடாது.

மேலும், தேர்வர் தவறான நடவடிக்கையிலோ அல்லது தேர்வினை சீர்குலைக்கும் நோக்கத்திலோ, பணியில் அமர்த்தப்பட்டுள்ள அலுவலர், பணியாளர்களைத் தாக்கும் முயற்சியிலோ ஈடுபட்டால் தேர்வர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விதிமுறைகளின்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: “நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - ANBIL MAHESH POYYAMOZHI

Last Updated : Jun 9, 2024, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.