ETV Bharat / state

ஈரோடு மக்களவைத் தொகுதி; மூன்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 2:52 PM IST

Erode EVM Machine Sealed: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் (IRTT) வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு மூன்றடுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Erode EVM Machine Sealed
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி

ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.

அதில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியானது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தலுக்காக ஈரோடு தொகுதியில் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று மாலையுடன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவு பெற்ற நிலையில், மொத்தம் 76.54 சதவீதம் ஓட்டுகள் ஈரோடு தொகுதியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்து சித்தோட்டில் உள்ள அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறியதாவது, “ ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,688 வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் சித்தோட்டில் உள்ள அரசு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இப்பணி பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 76.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்த பின்னர், வேட்பாளர்கள் சிசிடிவி காட்சியைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும், வெளியேயும் மொத்தமாக 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி, தீத் தடுப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரத்தில் முரண்பாடு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தகவல்! - Lok Sabha Election 2024

ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.

அதில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியானது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தலுக்காக ஈரோடு தொகுதியில் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று மாலையுடன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவு பெற்ற நிலையில், மொத்தம் 76.54 சதவீதம் ஓட்டுகள் ஈரோடு தொகுதியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்து சித்தோட்டில் உள்ள அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறியதாவது, “ ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,688 வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் சித்தோட்டில் உள்ள அரசு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இப்பணி பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 76.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்த பின்னர், வேட்பாளர்கள் சிசிடிவி காட்சியைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும், வெளியேயும் மொத்தமாக 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி, தீத் தடுப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரத்தில் முரண்பாடு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தகவல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.