ETV Bharat / state

விஜய்க்கு கவிதை எழுதி உலக சாதனை.. கில்லி ரீரிலீஸ் நாளில் சுவாரஸ்ய நிகழ்வு! - vijay fan world record

vijay fan world record: கில்லி திரைப்படம் இன்று ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில், திருப்பத்தூரில் விஜய் ரசிகர் ஒருவர் தொடர்ச்சியாக 36 மணி நேரத்தில் விஜய் பற்றிய 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழுக் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 6:31 PM IST

கில்லி ரீரிலீஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர் 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதி உலக சாதனை
கில்லி ரீரிலீஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர் 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதி உலக சாதனை
கில்லி ரீரிலீஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர் 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதி உலக சாதனை

திருப்பத்தூர்: கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம், இன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் (30) என்பவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் (Universal Achiever Book of Record) உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் (Future Kalam Book of Record) தனியார் நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில், கடந்த 16ஆம் தேதி காலை 11 மணிக்குத் துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை, மொத்தம் 36 மணி நேரத்தில் விஜய் பற்றிய 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழுக் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலையில் உள்ள சிகேசி திரையரங்கில், இன்று கில்லி திரைப்படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து, உலக சாதனை படைத்த கதிருக்கு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் நவீன் குமார் மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: நீயா? நானா? வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருப்பதில் பாஜக கோஷ்டி மோதல் - 3 பேர் கைது - ஆம்பூரில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

கில்லி ரீரிலீஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர் 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதி உலக சாதனை

திருப்பத்தூர்: கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம், இன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் (30) என்பவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் (Universal Achiever Book of Record) உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் (Future Kalam Book of Record) தனியார் நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில், கடந்த 16ஆம் தேதி காலை 11 மணிக்குத் துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை, மொத்தம் 36 மணி நேரத்தில் விஜய் பற்றிய 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழுக் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலையில் உள்ள சிகேசி திரையரங்கில், இன்று கில்லி திரைப்படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து, உலக சாதனை படைத்த கதிருக்கு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் நவீன் குமார் மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: நீயா? நானா? வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருப்பதில் பாஜக கோஷ்டி மோதல் - 3 பேர் கைது - ஆம்பூரில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.