ETV Bharat / state

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு விஜய் வைக்கும் கோரிக்கை என்ன? - Vijay about chennai air show death

Vijay about air show death: சென்னையில் மெரினா விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

மெரினாவிம் மயக்கம் அடைந்தவர்கள் மற்றும் விஜய் புகைப்படம்
மெரினாவிம் மயக்கம் அடைந்தவர்கள் மற்றும் விஜய் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்திய விமானப்படை தளங்களில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று (அக்.06) சென்னை மெரினாவில் விமான வான் சாகசக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். ரயில்கள், பேருந்துகள் என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை புரிந்தனர். இதனால், சென்னையில் நேற்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகசம் முடிந்து ஒரே நேரத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியதால் சாலைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பலர் நடந்தே செல்ல சென்றனர். மேலும் கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இதையும் படிங்க: "விமான சாகசத்தைக் காண வந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Anbumani Ramadoss

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்திய விமானப்படை தளங்களில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று (அக்.06) சென்னை மெரினாவில் விமான வான் சாகசக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். ரயில்கள், பேருந்துகள் என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை புரிந்தனர். இதனால், சென்னையில் நேற்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகசம் முடிந்து ஒரே நேரத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியதால் சாலைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பலர் நடந்தே செல்ல சென்றனர். மேலும் கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இதையும் படிங்க: "விமான சாகசத்தைக் காண வந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Anbumani Ramadoss

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.