ETV Bharat / state

"அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை"- டிடிவி தினகரன் திட்டவட்டம்! - TTV Dhinakaran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 3:42 PM IST

TTV Dhinakaran Pressmeet: அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையும் எண்ணம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (credits-ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை எனவும், இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்த காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவு மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் பேட்டி (credits-ETV Bharat Tamil Nadu)

அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி என்றும், அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம் என தெரிவித்தார். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது எனவும், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், அதிமுகவுக்கு 2019ஆம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு வீதத்தில் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது எனவும், திமுகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தை பெற்றுள்ளதாக கூறினார். வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா அப்போது ஆதரித்தார், அவரது வழியில் நாங்களும் அச்சட்டத்தை ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் அறிவிப்போம் - அன்புமணி ராமதாஸ்

தஞ்சாவூர்: தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை எனவும், இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்த காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவு மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் பேட்டி (credits-ETV Bharat Tamil Nadu)

அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி என்றும், அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம் என தெரிவித்தார். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது எனவும், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், அதிமுகவுக்கு 2019ஆம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு வீதத்தில் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது எனவும், திமுகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தை பெற்றுள்ளதாக கூறினார். வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா அப்போது ஆதரித்தார், அவரது வழியில் நாங்களும் அச்சட்டத்தை ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் அறிவிப்போம் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.