ETV Bharat / state

மக்களவையில் முதல் பேச்சு.. துரை வைகோ எழுப்பிய ஐந்து விவகாரங்கள்! - DURAI VAIKO PARLIAMENT SPEECH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 8:47 PM IST

DURAI VAIKO PARLIAMENT SPEECH: திருச்சி எம்.பி துரை வைகோ நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நேற்று பேசிய நிலையில், அவரை மதிமுக பொதுச் செயலாளரும், தந்தையுமான வைகோ பாராட்டியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவையில் துரை வைகோ
துரை வைகோ (CREDIT - DURAI VAIKO X PAGE)

டெல்லி: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடிய நிலையில், ஜூன் 25ஆம் தேதி மக்களவை உறுப்பினராக துரை வைகோ பதவி ஏற்றார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (ஜூலை 2) பங்கேற்று துரை வைகோ, தன்னுடைய முதல் பேச்சினை பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களவையில் அவர் ஆற்றிய உரையை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன். முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக பேச விரும்புகிறேன்.

பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன். இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும், வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையை கூற விரும்புகிறேன்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3,020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெயிலிலும், மழையிலும், பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும், அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். நான் மதிமுக சார்பிலோ, இந்தியா கூட்டணி சார்பிலோ, எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை.

ஆனால் நான், சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன்” என உரையாற்றியதாக பதிவிட்டுள்ளார். மேலும், மதிமுக பொதுச் செயலாளரும், தந்தையுமான வைகோ எனது கன்னிப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார் எனவும், ஆனால் எனக்கு நிறைவு இல்லை என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழர்களை தொடர்புபடுத்திய பேசிய விவகாரம்; மதுரை நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே மனுத்தாக்கல்! - Shobha Karandlanje case

டெல்லி: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடிய நிலையில், ஜூன் 25ஆம் தேதி மக்களவை உறுப்பினராக துரை வைகோ பதவி ஏற்றார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (ஜூலை 2) பங்கேற்று துரை வைகோ, தன்னுடைய முதல் பேச்சினை பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களவையில் அவர் ஆற்றிய உரையை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன். முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக பேச விரும்புகிறேன்.

பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன். இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும், வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையை கூற விரும்புகிறேன்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3,020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெயிலிலும், மழையிலும், பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும், அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். நான் மதிமுக சார்பிலோ, இந்தியா கூட்டணி சார்பிலோ, எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை.

ஆனால் நான், சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன்” என உரையாற்றியதாக பதிவிட்டுள்ளார். மேலும், மதிமுக பொதுச் செயலாளரும், தந்தையுமான வைகோ எனது கன்னிப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார் எனவும், ஆனால் எனக்கு நிறைவு இல்லை என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழர்களை தொடர்புபடுத்திய பேசிய விவகாரம்; மதுரை நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே மனுத்தாக்கல்! - Shobha Karandlanje case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.