ETV Bharat / state

"காலமான சாந்தன்: இவர்களையாவது இலங்கை அனுப்புங்க" - ராஜிவ் கொலை வழக்கில் கோரிக்கை விடுக்கும் தமிழ்நாடு அரசு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 3:18 PM IST

Updated : Mar 4, 2024, 5:22 PM IST

Madras High Court: ராஜிவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட மூவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, மற்றும் இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா இல்லாததால் கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சாந்தன் நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயைக் கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழக அரசு தரப்பில், “ பிப்ரவரி 22 ஆம் தேதி, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுப்ப முடியவில்லை.

அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி மீண்டும் அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இதயப் பாதிப்பு காரணமாகப் பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். அதனால், அவரை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில், “இலங்கை தூதரகம் புதியதாகப் பயண அனுமதி வழங்கினால், உடனடியாக இறந்த சாந்தனின் உடலை இலங்கை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பயண ஆவணங்களைச் சரிபார்க்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 04) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மத்திய அரசு சார்பில், உயிரிழந்த சாந்தனின் உடல் மார்ச் 01 ஆம் தேதி இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்பொழுது, தமிழக அரசு சார்பில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதில், சாந்தன் உயிரிழந்து விட்டதால் மற்ற மூவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதில், மத்திய அரசு சார்பில், தூதரகத்தின் அனுமதி பெற்றால் இலங்கைக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. புதியதாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திடீரென மயங்கி விழுந்த தாய் யானை.. பரிதவித்த குட்டி யானையை பாலூட்டி பராமரிக்கும் வனத்துறை.. பண்ணாரியில் நடந்தது என்ன?

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, மற்றும் இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா இல்லாததால் கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சாந்தன் நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயைக் கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழக அரசு தரப்பில், “ பிப்ரவரி 22 ஆம் தேதி, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுப்ப முடியவில்லை.

அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி மீண்டும் அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இதயப் பாதிப்பு காரணமாகப் பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். அதனால், அவரை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில், “இலங்கை தூதரகம் புதியதாகப் பயண அனுமதி வழங்கினால், உடனடியாக இறந்த சாந்தனின் உடலை இலங்கை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பயண ஆவணங்களைச் சரிபார்க்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 04) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மத்திய அரசு சார்பில், உயிரிழந்த சாந்தனின் உடல் மார்ச் 01 ஆம் தேதி இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்பொழுது, தமிழக அரசு சார்பில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதில், சாந்தன் உயிரிழந்து விட்டதால் மற்ற மூவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதில், மத்திய அரசு சார்பில், தூதரகத்தின் அனுமதி பெற்றால் இலங்கைக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. புதியதாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திடீரென மயங்கி விழுந்த தாய் யானை.. பரிதவித்த குட்டி யானையை பாலூட்டி பராமரிக்கும் வனத்துறை.. பண்ணாரியில் நடந்தது என்ன?

Last Updated : Mar 4, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.