ETV Bharat / state

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை.. பதறிய திண்டுக்கல்.. போலீசார் தீவிர விசாரணை! - dindigul rowdy murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திண்டுக்கல் அருகே முன் பகை காரணமாக ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தீன தயாள வர்மன் மற்றும் சம்பவ இடத்தின் புகைப்படம் புகைப்படம்
படுகொலை செய்யப்பட்ட தீன தயாள வர்மன் மற்றும் சம்பவ இடத்தின் புகைப்படம் புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தீன தயாள வர்மன் (32). இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் மீது 2016 ஆம் ஆண்டு நடந்த கொலையில் தொடர்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மா.மு.கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று (செப்.25) மதியம் பட்டப்பகலில் தீன தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முன் பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தீன தயாள வர்மன் (32). இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் மீது 2016 ஆம் ஆண்டு நடந்த கொலையில் தொடர்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மா.மு.கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று (செப்.25) மதியம் பட்டப்பகலில் தீன தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முன் பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.