ETV Bharat / state

ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதி சாதித்த தமிழ் வழி பயின்ற மாணவர்... விடாமுயற்சிக்கு குவியும் பாராட்டு! - NEET exam results 2024

NEET exam results 2024: திருவாரூர், கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர், தமிழ் வழியில் 12ஆம் வகுப்பு வரை பயின்று, இரண்டாவது முயற்சியில் ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 3:30 PM IST

student hariharan Image
மாணவன் ஹரிஹரன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் விவசாயியாகவும், அவரது மனைவி கலைச்செல்வி இல்லத்தரசியாகவும் உள்ளார். இத்தம்பதியின் மகன் ஹரிஹரன், கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று 600க்கு 533 மதிப்பெண் எடுத்துள்ளார். மிகவும் பின்தங்கிய தனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால், சிறுவயதில் இருந்து மருத்துவராக வேண்டுமென்ற கனவில் ஹரிஹரன் இருந்து வந்துள்ளார்.

நீட் தேர்வில் சாதித்த மாணவன் குறித்த வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், 12ஆம் வகுப்பை முடித்தவுடன் அவர் நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியுள்ளார். அதில் 145 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற போதிலும், அவருக்கு மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத ஹரிஹரன், மீண்டும் நீட் தேர்வை எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

மகனின் ஆசையைப் புரிந்து கொண்ட அவரது தந்தை சிவக்குமார், கடனை வாங்கி தனது மகனை நாமக்கலில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அங்கு ஹரிஹரன் மூன்று மாதங்கள் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார்.

இதனையடுத்து, ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஹரிஹரன், நீட் தேர்வை ஆங்கில வழியில் எதிர்கொள்வது என்று முடிவெடுத்து, தனது பயிற்சியார்களிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு தன்னை தயார் செய்து கொண்டு தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் ஹரிஹரன், 720க்கு 494 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக, தற்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 75 சதவீத இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இது குறித்து பேசிய மாணவர் ஹரிஹரன், "சிறுவயதில் இருந்து தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததால் கண்டிப்பாக இரண்டாவது முறை நீட் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றேன். 145இல் இருந்து முன்னேறி 494 மதிப்பெண் எடுத்துள்ளதை பெரிய மாற்றமாக கருதுகிறேன்.

எனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததால் நான் கண்டிப்பாக மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்து, தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், என்னைப் போன்றே அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் தன்னம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறினார். இந்த நிலையில், மாணவர் ஹரிஹரனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும், இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்து அவனது வீடு தேடி வந்த அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் சக்திவேல், உனது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறி, நெகிழ்ச்சியுடன் மாணவருக்கு தனது பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவாரூர் அருகே பாமாயில் தொழிற்சாலையை அகற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்! - Farmers protest against factory

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் விவசாயியாகவும், அவரது மனைவி கலைச்செல்வி இல்லத்தரசியாகவும் உள்ளார். இத்தம்பதியின் மகன் ஹரிஹரன், கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று 600க்கு 533 மதிப்பெண் எடுத்துள்ளார். மிகவும் பின்தங்கிய தனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால், சிறுவயதில் இருந்து மருத்துவராக வேண்டுமென்ற கனவில் ஹரிஹரன் இருந்து வந்துள்ளார்.

நீட் தேர்வில் சாதித்த மாணவன் குறித்த வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், 12ஆம் வகுப்பை முடித்தவுடன் அவர் நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியுள்ளார். அதில் 145 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற போதிலும், அவருக்கு மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத ஹரிஹரன், மீண்டும் நீட் தேர்வை எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

மகனின் ஆசையைப் புரிந்து கொண்ட அவரது தந்தை சிவக்குமார், கடனை வாங்கி தனது மகனை நாமக்கலில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அங்கு ஹரிஹரன் மூன்று மாதங்கள் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார்.

இதனையடுத்து, ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஹரிஹரன், நீட் தேர்வை ஆங்கில வழியில் எதிர்கொள்வது என்று முடிவெடுத்து, தனது பயிற்சியார்களிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு தன்னை தயார் செய்து கொண்டு தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் ஹரிஹரன், 720க்கு 494 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக, தற்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 75 சதவீத இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இது குறித்து பேசிய மாணவர் ஹரிஹரன், "சிறுவயதில் இருந்து தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததால் கண்டிப்பாக இரண்டாவது முறை நீட் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றேன். 145இல் இருந்து முன்னேறி 494 மதிப்பெண் எடுத்துள்ளதை பெரிய மாற்றமாக கருதுகிறேன்.

எனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததால் நான் கண்டிப்பாக மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்து, தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், என்னைப் போன்றே அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் தன்னம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறினார். இந்த நிலையில், மாணவர் ஹரிஹரனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும், இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்து அவனது வீடு தேடி வந்த அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் சக்திவேல், உனது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறி, நெகிழ்ச்சியுடன் மாணவருக்கு தனது பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவாரூர் அருகே பாமாயில் தொழிற்சாலையை அகற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்! - Farmers protest against factory

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.