ETV Bharat / state

போலி ஷேர் மார்க்கெட் ஆப்.. ரூ.24 லட்சம் மோசடி.. திருப்பூர் போலீசாரிடம் இருவர் சிக்கியது எப்படி? - stock market mock application

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

திருப்பூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வாட்ஸ்-அப் மூலம் பெண் போன்று பேசி போலி மொபைல் ஆப் வழியாக சுமார் ரூ.24 லட்சம் வரை மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட மோசடி நபர்கள்
திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட மோசடி நபர்கள் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பங்குச்சந்தை போலி அப்ளிகேஷன் வழியாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பெண் போன்று ஆள்மாறாட்டம் செய்து, ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக வழிகாட்டும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ராஜேஷுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், பேசியவர், தான் ஒரு பெண் என்றும், தனக்குத் தெரிந்த ஒரு அப்ளிகேஷனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், அதற்காக அந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ராஜேஷும் அந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும், அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து பல தவணைகளாக சுமார் ரூ.24 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க நினைத்தபோது, மீண்டும் ரூ.10 லட்சம் கட்டினால் மட்டுமே மொத்த பணமும் கிடைக்கும் என குறுந்தகவல் வந்துள்ளது.

இதையும் படிங்க: விமான என்ஜினில் வெளிவந்த புகை.. எரிபொருள் அதிகமாக நிரப்பியது காரணமா? - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அந்த அப்ளிகேஷன் குறித்து விசாரித்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். வங்கி உதவியுடன் பணம் பெற்றவரின் விவரங்களைச் சேகரித்தனர்.

அந்த வங்கிக் கணக்குகள் மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி (41), திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா (37) ஆகியோருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என பெண் போன்று பேசி, ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பங்குச்சந்தை போலி அப்ளிகேஷன் வழியாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பெண் போன்று ஆள்மாறாட்டம் செய்து, ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக வழிகாட்டும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ராஜேஷுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், பேசியவர், தான் ஒரு பெண் என்றும், தனக்குத் தெரிந்த ஒரு அப்ளிகேஷனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், அதற்காக அந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ராஜேஷும் அந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும், அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து பல தவணைகளாக சுமார் ரூ.24 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க நினைத்தபோது, மீண்டும் ரூ.10 லட்சம் கட்டினால் மட்டுமே மொத்த பணமும் கிடைக்கும் என குறுந்தகவல் வந்துள்ளது.

இதையும் படிங்க: விமான என்ஜினில் வெளிவந்த புகை.. எரிபொருள் அதிகமாக நிரப்பியது காரணமா? - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அந்த அப்ளிகேஷன் குறித்து விசாரித்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். வங்கி உதவியுடன் பணம் பெற்றவரின் விவரங்களைச் சேகரித்தனர்.

அந்த வங்கிக் கணக்குகள் மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி (41), திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா (37) ஆகியோருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என பெண் போன்று பேசி, ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.