ETV Bharat / state

பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: 47 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய நண்பர் கூட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 9:58 PM IST

Theni School Alumni Meet: தேனியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 1973-1977ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள், சுமார் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளிக்கு வந்து சந்தித்துக்கொண்டு பேசி மகிழ்ந்தனர்.

47 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய நண்பர் கூட்டம்
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேனி: தேனி நகரப் பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1973-1977ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் வந்து, நண்பர்களைச் சந்தித்து தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட 60 வயதைக் கடந்த முன்னாள் மாணவர்கள் பலர், தற்போது தேனி மற்றும் வெளிமாவட்டங்களில் பல்வேறு துறைகளில் முன்னணி பொறுப்புகளிலும், தொழிலதிபர்களாகவும் இருந்து வருகின்றனர். வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்த நண்பர்கள், தங்களுடன் படித்த அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பின் தாங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒன்றிணைந்த நண்பர்கள், தங்கள் பழைய நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். பின்னர் பள்ளியைச் சுற்றி வந்தும், பள்ளி அருகே செல்லும் ரயில்வே பாலத்தில் ஏறி நின்றும், தாங்கள் படித்த காலத்தில் இருந்த பழைய நினைவலைகளை, தங்கள் சக நண்பர்களிடம் நினைவுபடுத்தி மகிழ்ந்தனர்.

பின் தாங்கள் பயின்ற பள்ளி வகுப்பு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்கள், தொடர்ந்து ஒன்றாக சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட நண்பர்கள், சிறுபிள்ளைகளாக தங்கள் பள்ளி காலத்திற்கேச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச மகளிர் தினம்: நீதித்துறையில் சாதித்த பெண்கள் கூறும் தாரக மந்திரம்!

பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேனி: தேனி நகரப் பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1973-1977ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் வந்து, நண்பர்களைச் சந்தித்து தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட 60 வயதைக் கடந்த முன்னாள் மாணவர்கள் பலர், தற்போது தேனி மற்றும் வெளிமாவட்டங்களில் பல்வேறு துறைகளில் முன்னணி பொறுப்புகளிலும், தொழிலதிபர்களாகவும் இருந்து வருகின்றனர். வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்த நண்பர்கள், தங்களுடன் படித்த அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பின் தாங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒன்றிணைந்த நண்பர்கள், தங்கள் பழைய நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். பின்னர் பள்ளியைச் சுற்றி வந்தும், பள்ளி அருகே செல்லும் ரயில்வே பாலத்தில் ஏறி நின்றும், தாங்கள் படித்த காலத்தில் இருந்த பழைய நினைவலைகளை, தங்கள் சக நண்பர்களிடம் நினைவுபடுத்தி மகிழ்ந்தனர்.

பின் தாங்கள் பயின்ற பள்ளி வகுப்பு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்கள், தொடர்ந்து ஒன்றாக சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட நண்பர்கள், சிறுபிள்ளைகளாக தங்கள் பள்ளி காலத்திற்கேச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச மகளிர் தினம்: நீதித்துறையில் சாதித்த பெண்கள் கூறும் தாரக மந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.