ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் மீண்டும் சிறையில் அடைப்பு! - Armstrong murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 7:31 PM IST

Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங், ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன்
ஆம்ஸ்ட்ராங், ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் 24வது நபராக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் சிறையில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ரவுடி நாகேந்திரன் காவல்துறையினரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில், அஸ்வத்தாமனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டினாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில், நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமன் இருவரும் கூறிய பதில்கள் ஒரே மாதிரியாக உள்ளதா? என காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் மற்றும் மகன் அஸ்வத்தாமன் இருவருக்கும் இன்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, காவல்துறையினர் மீண்டும் போலீஸ் காவல் கேட்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது போலீஸ் விசாரணைக்கு எடுக்காமல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரனை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு மறுக்கும் ரவுடி நாகேந்திரன்? அடுத்தகட்ட மூவ் என்ன?

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் 24வது நபராக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் சிறையில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ரவுடி நாகேந்திரன் காவல்துறையினரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில், அஸ்வத்தாமனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டினாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில், நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமன் இருவரும் கூறிய பதில்கள் ஒரே மாதிரியாக உள்ளதா? என காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் மற்றும் மகன் அஸ்வத்தாமன் இருவருக்கும் இன்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, காவல்துறையினர் மீண்டும் போலீஸ் காவல் கேட்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது போலீஸ் விசாரணைக்கு எடுக்காமல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரனை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு மறுக்கும் ரவுடி நாகேந்திரன்? அடுத்தகட்ட மூவ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.