ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி மனைவியை கொல்வதாக மிரட்டல்.. பதற்றத்தில் அயனாவரம்..! - bsp armstrong family

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 3:46 PM IST

Updated : Aug 4, 2024, 4:01 PM IST

armstrong family under threat: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்) (credit - BSP Tamil nadu x page)

சென்னை: சென்னையில் கடந்த ஜூன் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அவர்களின் வீட்டின் முகவரிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில், 'நாட்டு வெடிகுண்டுகள் வீசி உங்கள் குடும்பத்தினர் கொலை செய்யப்படுவார்கள் என்றும் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாகவும்' அதில் குறிப்பிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அது குறித்து செம்பியம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பம் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை செம்பியம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆய்வின்போது மிஸ் ஆன கலெக்டர்.. போன் போட்டு கடிந்த அமைச்சர்.. நெல்லையில் நடந்தது என்ன?

சென்னை: சென்னையில் கடந்த ஜூன் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அவர்களின் வீட்டின் முகவரிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில், 'நாட்டு வெடிகுண்டுகள் வீசி உங்கள் குடும்பத்தினர் கொலை செய்யப்படுவார்கள் என்றும் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாகவும்' அதில் குறிப்பிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அது குறித்து செம்பியம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பம் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை செம்பியம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆய்வின்போது மிஸ் ஆன கலெக்டர்.. போன் போட்டு கடிந்த அமைச்சர்.. நெல்லையில் நடந்தது என்ன?

Last Updated : Aug 4, 2024, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.