ETV Bharat / state

"விஜய் கொள்கை வேறு.. எங்களது கட்சியின் கொள்கை வேறு" - சீமான் பளிச் பதில்!

திராவிடத்தை தனது கண்ணாக சொல்லும் விஜயின் கொள்கை வேறு, நாதகவின் கொள்கை வேறு எனவும், என் பயணம் என் கால்களை நம்பித்தான். பிறரின் கால்களை நம்பி பயணிக்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான், விஜய்
சீமான் மற்றும் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மதுரை: மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்த கேட்டறிந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், "இந்த பகுதி மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகளுக்கு போர்க்கால நடவடிக்கை எடுப்பீர்கள்.

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல: 13 வருடத்திற்கு முன்பாக நான் இதே கோட்பாடு கோபத்துடன் தான் வந்தேன். தற்பொழுது தம்பி வந்துள்ளார். இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. இந்திய திராவிடக் கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு இந்த பிழைப்பை எனக்கு கொடுத்துள்ளது. எனது கடமையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டு, அதனை செய்கிறேன்.

திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேறு இதுவேறு. இது என் நாடு, என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். சிலவற்றுள் எங்கள் கொள்கையிலிருந்து விஜய் மாறுபடுகிறார். மற்றபடி நாங்கள் சொன்னதைச் சொல்கிறார்.

மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி, பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால் ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம், அதனைக் கொள்கையாக எடுத்துக் கொள்வது, ஏற்க முடியாது.

விஜயை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைக்கிறீர்களோ அதை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். என்னை போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும். ஒரு பிரச்சனைக்கு அதன் வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.

பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள். அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிட மாடல் என்கிறார். நாங்கள் அதனை திருட்டு மாடல் தீய்ந்து‌ போன மாடல் என்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம். தமிழ்நாட்டில் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி தமிழர் ஆட்சி என்று சொல்ல உங்களால் முடியவில்லை, இது என்ன மாடல்.

விசிக, நாதக கூட்டணிக்கு விஜய் அழைப்பு?: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நீண்ட நாள் கோரிக்கை. நான் மிகத் தெளிவான கொள்கை உடையவன். என் பயணம் என் கால்களை நம்பி தான், உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது. என் இலக்கு என்ன? என் பாதை, நோக்கம் என்ன? என எனக்கு தெரியும். எனக்கென்று ஒரு கனவு உள்ளது‌. அது என்னுடையது அல்ல என் முன்னோர்களுடைய கனவு. அதை நிறைவேற்ற நான் போராடுகிறேன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என்னுடைய பயணம் மிகவும் உறுதியானது, நிலையானது.

விஜய் முதலமைச்சராக வாய்ப்புள்ளதா? முதலமைச்சர் காலம் தான் தீர்மானிக்கும். மக்கள் கையில் தான் இருக்கிறது. நாம் இப்போது அதை பேசிக் கொண்டிருப்பது தேவையில்லை. நாங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். தம்பி இப்போது தான் வந்திருக்கிறார். அவரை வாழ்த்த வேண்டும்.

பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு? விஜயின் பேச்சை முழுமையாக கேட்கவில்லை. ஆனால், சிறிது போனில் கேட்டேன். பெரியாரின் கடவுள் மறுப்பு ஏற்கவில்லை, பகுத்தறிவை ஏற்கிறேன் என்கிறார். பகுத்தறிவு கொள்கையில் தான் கடவுள் மறுப்பும் உள்ளது. பெண்ணிய உரிமையை ஏற்பேன் என்கிறார்.

பெரியார் எங்களுக்கு பெண்ணிய உரிமையைப் போதிக்கவில்லை. பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே எங்களுடைய முன்னவர்களின் முன்னுரிமை பெண்ணுரிமை தான், வேலுநாச்சியார் தான் பெண்ணுரிமையை முதலில் கொண்டு வந்தவர். பெரியாரிடம் இருந்து தான் பெண்ணுரிமை வந்தது என்பதை நாங்கள் ஏற்கவில்லை வேலுநாச்சியாரிடம் இருந்துதான் பெண்ணுரிமை வந்தது.

விஜயுடம் நாதக கூட்டணி?: யாருடனும் எங்கள் கூட்டணி கிடையாது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி 1.14%, 4 லட்சம் வாக்குகள் வாங்கிய கட்சி உயிரோடு இருந்ததே இல்லை. தனித்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் வென்றவர் ஜெயலலிதா மட்டும்தான். அதன் பின்பு தனித்து நின்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக. அதன் பின்பு நான் தான் தனித்து நின்று 8 சதவீதம் பெற்றுள்ளேன். 5 முறை தோற்றும் ஆறாவது முறையும் தனித்துப் போட்டியிடுகிற கட்சி என்று இருந்தால் வரலாற்றில் அது நாதக தான்.

இதையும் படிங்க: "உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது தவெக" - விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

முதலமைச்சர் ஆசை இல்லையா?: முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதல்ல, முதலமைச்சராகி என்னென்ன செய்ய வேண்டும் என்கிறது தான் லட்சியம். முதலமைச்சராவது, பதவிக்கு வருவது, நாலு சீட்டு அடைவது, 500 கோடியை வாங்குவது என 50 சீட்டை வாங்க நான் வரவில்லை, நான் விடுதலைக்கு போராட வந்தவன் பிசினஸ்மேன் அல்ல. 2026 தேர்தல் பணியை நான் எப்போதோ தொடங்கிவிட்டேன்.

விஜய் உதயநிதி ஸ்டாலின் என தேர்தல் களம் மாறுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் எல்லாம் குறுக்கக் கோடு போட்டு ஆடிக் கொண்டிருப்போமா. விஜயைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்றால், இந்திய, திராவிடம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானவன் நான், இது இரண்டுமே என் இனத்திற்கு எதிரானது. திராவிடம் என்பது இந்தியத்தின் கூட்டாளி, இதனை நான் சொல்லவில்லை. முத்துராமலிங்கத் தேவர் ஆரியமும், திராவிடமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான் ஒரு நாள் கட்டிப்பிடித்துக் கைகுலுக்கி சங்கமிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

நான் தமிழன் என்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்கள். கோட்பாட்டு அளவில் நாங்கள் இந்திய அரசியலில் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள். ஏனென்றால், திராவிடம் எங்களுடன் தமிழ் பேசிக்கொண்டு என் மொழியை அழிக்கும். தமிழர், தமிழர் உரிமை என பேசிக்கொண்டு எங்களுடைய உரிமையை அழிக்கும், சிதைக்கும். மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தது யார்? திணித்தது யார்? காங்கிரஸ், பாஜக தான். இவற்றை எதிர்ப்பு இல்லாமல் காலூன்ற அனுமதித்தது திமுக தான்.

ஆட்சிக்கு வர வாய்ப்பு?: என்னைப்போல காசு கொடுக்காமல் எத்தனை ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் காசு கொடுக்காமல் கூட்டம் வருமா? இவர்களுக்கு சொந்த கட்சிக்காரனே காசு கொடுக்காமல் ஓட்டு போடமாட்டான். ஒரு ஓட்டுக்கு கூட காசு கொடுக்காமல், 36 லட்சம் ஓட்டு வாங்கி இருக்கிறேன். என் கட்சி வேட்பாளர்கள் வாரிசுகள் அல்ல. எளிய மக்களை தேடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறோம். நீங்கள் வாக்கை பெறவில்லை, பர்ச்சேஸ் பண்ணுகிறீர்கள். பாஜக திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றியதுபோல, 8% சீமான் 32 விழுக்காடு வந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாதா?.

தவெக கொள்கை எதிரியா? அண்ணனுக்கும், தம்பிக்கும் என்ன பகை இருக்கிறது. நான் திராவிடத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்கிறார் விஜய். அப்படி சொல்ல முடியாது. திராவிடம் தமிழ் தேசியத்திற்கான கொடிய புண். என் பயணம் வேறு, அவர் பாதை பயணம் வேறு. என் இலக்கை முடிவு செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மதுரை: மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்த கேட்டறிந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், "இந்த பகுதி மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகளுக்கு போர்க்கால நடவடிக்கை எடுப்பீர்கள்.

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல: 13 வருடத்திற்கு முன்பாக நான் இதே கோட்பாடு கோபத்துடன் தான் வந்தேன். தற்பொழுது தம்பி வந்துள்ளார். இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. இந்திய திராவிடக் கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு இந்த பிழைப்பை எனக்கு கொடுத்துள்ளது. எனது கடமையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டு, அதனை செய்கிறேன்.

திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேறு இதுவேறு. இது என் நாடு, என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். சிலவற்றுள் எங்கள் கொள்கையிலிருந்து விஜய் மாறுபடுகிறார். மற்றபடி நாங்கள் சொன்னதைச் சொல்கிறார்.

மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி, பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால் ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம், அதனைக் கொள்கையாக எடுத்துக் கொள்வது, ஏற்க முடியாது.

விஜயை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைக்கிறீர்களோ அதை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். என்னை போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும். ஒரு பிரச்சனைக்கு அதன் வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.

பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள். அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிட மாடல் என்கிறார். நாங்கள் அதனை திருட்டு மாடல் தீய்ந்து‌ போன மாடல் என்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம். தமிழ்நாட்டில் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி தமிழர் ஆட்சி என்று சொல்ல உங்களால் முடியவில்லை, இது என்ன மாடல்.

விசிக, நாதக கூட்டணிக்கு விஜய் அழைப்பு?: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நீண்ட நாள் கோரிக்கை. நான் மிகத் தெளிவான கொள்கை உடையவன். என் பயணம் என் கால்களை நம்பி தான், உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது. என் இலக்கு என்ன? என் பாதை, நோக்கம் என்ன? என எனக்கு தெரியும். எனக்கென்று ஒரு கனவு உள்ளது‌. அது என்னுடையது அல்ல என் முன்னோர்களுடைய கனவு. அதை நிறைவேற்ற நான் போராடுகிறேன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என்னுடைய பயணம் மிகவும் உறுதியானது, நிலையானது.

விஜய் முதலமைச்சராக வாய்ப்புள்ளதா? முதலமைச்சர் காலம் தான் தீர்மானிக்கும். மக்கள் கையில் தான் இருக்கிறது. நாம் இப்போது அதை பேசிக் கொண்டிருப்பது தேவையில்லை. நாங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். தம்பி இப்போது தான் வந்திருக்கிறார். அவரை வாழ்த்த வேண்டும்.

பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு? விஜயின் பேச்சை முழுமையாக கேட்கவில்லை. ஆனால், சிறிது போனில் கேட்டேன். பெரியாரின் கடவுள் மறுப்பு ஏற்கவில்லை, பகுத்தறிவை ஏற்கிறேன் என்கிறார். பகுத்தறிவு கொள்கையில் தான் கடவுள் மறுப்பும் உள்ளது. பெண்ணிய உரிமையை ஏற்பேன் என்கிறார்.

பெரியார் எங்களுக்கு பெண்ணிய உரிமையைப் போதிக்கவில்லை. பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே எங்களுடைய முன்னவர்களின் முன்னுரிமை பெண்ணுரிமை தான், வேலுநாச்சியார் தான் பெண்ணுரிமையை முதலில் கொண்டு வந்தவர். பெரியாரிடம் இருந்து தான் பெண்ணுரிமை வந்தது என்பதை நாங்கள் ஏற்கவில்லை வேலுநாச்சியாரிடம் இருந்துதான் பெண்ணுரிமை வந்தது.

விஜயுடம் நாதக கூட்டணி?: யாருடனும் எங்கள் கூட்டணி கிடையாது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி 1.14%, 4 லட்சம் வாக்குகள் வாங்கிய கட்சி உயிரோடு இருந்ததே இல்லை. தனித்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் வென்றவர் ஜெயலலிதா மட்டும்தான். அதன் பின்பு தனித்து நின்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக. அதன் பின்பு நான் தான் தனித்து நின்று 8 சதவீதம் பெற்றுள்ளேன். 5 முறை தோற்றும் ஆறாவது முறையும் தனித்துப் போட்டியிடுகிற கட்சி என்று இருந்தால் வரலாற்றில் அது நாதக தான்.

இதையும் படிங்க: "உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது தவெக" - விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

முதலமைச்சர் ஆசை இல்லையா?: முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதல்ல, முதலமைச்சராகி என்னென்ன செய்ய வேண்டும் என்கிறது தான் லட்சியம். முதலமைச்சராவது, பதவிக்கு வருவது, நாலு சீட்டு அடைவது, 500 கோடியை வாங்குவது என 50 சீட்டை வாங்க நான் வரவில்லை, நான் விடுதலைக்கு போராட வந்தவன் பிசினஸ்மேன் அல்ல. 2026 தேர்தல் பணியை நான் எப்போதோ தொடங்கிவிட்டேன்.

விஜய் உதயநிதி ஸ்டாலின் என தேர்தல் களம் மாறுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் எல்லாம் குறுக்கக் கோடு போட்டு ஆடிக் கொண்டிருப்போமா. விஜயைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்றால், இந்திய, திராவிடம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானவன் நான், இது இரண்டுமே என் இனத்திற்கு எதிரானது. திராவிடம் என்பது இந்தியத்தின் கூட்டாளி, இதனை நான் சொல்லவில்லை. முத்துராமலிங்கத் தேவர் ஆரியமும், திராவிடமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான் ஒரு நாள் கட்டிப்பிடித்துக் கைகுலுக்கி சங்கமிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

நான் தமிழன் என்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்கள். கோட்பாட்டு அளவில் நாங்கள் இந்திய அரசியலில் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள். ஏனென்றால், திராவிடம் எங்களுடன் தமிழ் பேசிக்கொண்டு என் மொழியை அழிக்கும். தமிழர், தமிழர் உரிமை என பேசிக்கொண்டு எங்களுடைய உரிமையை அழிக்கும், சிதைக்கும். மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தது யார்? திணித்தது யார்? காங்கிரஸ், பாஜக தான். இவற்றை எதிர்ப்பு இல்லாமல் காலூன்ற அனுமதித்தது திமுக தான்.

ஆட்சிக்கு வர வாய்ப்பு?: என்னைப்போல காசு கொடுக்காமல் எத்தனை ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் காசு கொடுக்காமல் கூட்டம் வருமா? இவர்களுக்கு சொந்த கட்சிக்காரனே காசு கொடுக்காமல் ஓட்டு போடமாட்டான். ஒரு ஓட்டுக்கு கூட காசு கொடுக்காமல், 36 லட்சம் ஓட்டு வாங்கி இருக்கிறேன். என் கட்சி வேட்பாளர்கள் வாரிசுகள் அல்ல. எளிய மக்களை தேடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறோம். நீங்கள் வாக்கை பெறவில்லை, பர்ச்சேஸ் பண்ணுகிறீர்கள். பாஜக திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றியதுபோல, 8% சீமான் 32 விழுக்காடு வந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாதா?.

தவெக கொள்கை எதிரியா? அண்ணனுக்கும், தம்பிக்கும் என்ன பகை இருக்கிறது. நான் திராவிடத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்கிறார் விஜய். அப்படி சொல்ல முடியாது. திராவிடம் தமிழ் தேசியத்திற்கான கொடிய புண். என் பயணம் வேறு, அவர் பாதை பயணம் வேறு. என் இலக்கை முடிவு செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.