ETV Bharat / state

கோவையில் மநீம நிர்வாகிகள் கூட்டம்: திமுகவுடன் கூட்டணியா? தனித்து மக்களவை தேர்தலில் போட்டியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 11:01 PM IST

Makkal needhi maiam: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பதை கமல்ஹாசன் தான் முடிவு செய்வார் என்றும் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவர் மெளரியா தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற மநீம நிர்வாகிகள் கூட்டம்
கோவையில் நடைபெற்ற மநீம நிர்வாகிகள் கூட்டம்

கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்ய கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் இன்று(பிப்.4) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, மயில்சாமி, அனுஷா, ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றும் அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர், மாநில துணைத்தலைவர் மௌரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம். இந்தக் கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக, கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும், தேர்தல் பணியாற்ற வேண்டும், எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என்று நுணுக்கமான அறிவுரைகளை எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளோம். நிர்வாகிகள் மிகச் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்காக உழைப்பார்கள்.

எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள். இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க வேண்டி இருக்கிறது. எங்கள் நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம். அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை. அதனை தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார். கூட்டணியைப் பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தலைவர் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார். எத்தனை தொகுதி என்பதையும் அவர்தான் முடிவு செய்வார். கூட்டணி உள்ளதா இல்லையா என்பதையும் கமலஹாசன் தான் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!

கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்ய கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் இன்று(பிப்.4) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, மயில்சாமி, அனுஷா, ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றும் அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர், மாநில துணைத்தலைவர் மௌரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம். இந்தக் கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக, கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும், தேர்தல் பணியாற்ற வேண்டும், எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என்று நுணுக்கமான அறிவுரைகளை எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளோம். நிர்வாகிகள் மிகச் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்காக உழைப்பார்கள்.

எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள். இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க வேண்டி இருக்கிறது. எங்கள் நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம். அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை. அதனை தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார். கூட்டணியைப் பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தலைவர் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார். எத்தனை தொகுதி என்பதையும் அவர்தான் முடிவு செய்வார். கூட்டணி உள்ளதா இல்லையா என்பதையும் கமலஹாசன் தான் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.