ETV Bharat / state

பழனியில் நடைபெற உள்ள உலக முருக பக்தர்கள் மாநாட்டில் 3 மாநில முதல்வர் பங்கேற்பதாக தகவல்! - ULAGA MUTHAMIL MURUGA MAANAADU

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:23 PM IST

Minister PK Sekar Babu: பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த மாநாட்டில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN MINISTER P. K. SEKAR BABU OVERSEES THE PREPARATION ON ULAGA MUTHAMIL MURUGA MANAADU
உலக முத்தமிழ் முருக மாநாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் சேகர்பாபு (credit-ETV Bharat Tamil Nadu)
உலக முத்தமிழ் முருக மாநாடு ஏற்ப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு. (video credit-ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனியில் ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உலக முருக பக்தர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். பின் ரோப்கார் மூலம் மலைக்கோயிலுள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும்,,பிற பணிகளையும் அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்களும் பங்கேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:திருப்பதியில் ஆர்ஜிதா சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. ஏழுமலையானை அருகே தரிசிக்க விண்ணப்பிப்பது எப்படி?

உலக முத்தமிழ் முருக மாநாடு ஏற்ப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு. (video credit-ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனியில் ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உலக முருக பக்தர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். பின் ரோப்கார் மூலம் மலைக்கோயிலுள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும்,,பிற பணிகளையும் அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்களும் பங்கேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:திருப்பதியில் ஆர்ஜிதா சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. ஏழுமலையானை அருகே தரிசிக்க விண்ணப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.