ETV Bharat / state

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 3:00 PM IST

Minister Anitha Radhakrishnan Case: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தற்போது மாவட்ட நீதிபதி ஐயப்பன் விடுமுறையில் உள்ளதால் சார்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெரும்பாக்கம் நீர்முழ்கி பட்டா பகுதியில் கட்டுமானமா? - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தற்போது மாவட்ட நீதிபதி ஐயப்பன் விடுமுறையில் உள்ளதால் சார்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெரும்பாக்கம் நீர்முழ்கி பட்டா பகுதியில் கட்டுமானமா? - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.