ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கு: அதிமுக மாஜி எம்எல்ஏ-வுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்! - EX MLA Vincent land grabbing case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 2:16 PM IST

ADMK EX MLA Vincent land grabbing case: போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் 2 ஆயிரம் சதுர அடியில் கல்லூரி கட்ட அனுமதி வாங்கிவிட்டு, ஜஸ்டின் என்பவரின் இடத்தையும் ஆக்கிரமித்து, 3 ஆயிரத்து 896 சதுர அடியில் கல்லூரியைக் கட்டியுள்ளதாக நகர்ப்புற திட்டமிடல் துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஜஸ்டின் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 2001-ல் அனுமதி வாங்கி விட்டதாக வின்சென்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் திட்ட இயக்குநர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி வின்சென்ட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வின்சென்ட் தரப்பில் 2002ல் நிலம் வாங்கப்பட்டாதவும், விசாரணையில் ஜஸ்டின் என்பவரால் 2009ல் வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. மேலும், கட்டட திட்ட அனுமதி 2001ம் ஆண்டே வாங்கியது கூட்டு சதியை உறுதி செய்கிறது. அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை செய்யலாம் எனவும், சட்டத்திற்குட்பட்டு எந்த நடவடிக்கையும் வின்சென்ட் மீது எடுக்கலாம் எனவும், நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தடையிடாது எனவும் தெரிவித்து வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய பாமக ராமலிங்கம் கொலை வழக்கு.. 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

சென்னை: கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் 2 ஆயிரம் சதுர அடியில் கல்லூரி கட்ட அனுமதி வாங்கிவிட்டு, ஜஸ்டின் என்பவரின் இடத்தையும் ஆக்கிரமித்து, 3 ஆயிரத்து 896 சதுர அடியில் கல்லூரியைக் கட்டியுள்ளதாக நகர்ப்புற திட்டமிடல் துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஜஸ்டின் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 2001-ல் அனுமதி வாங்கி விட்டதாக வின்சென்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் திட்ட இயக்குநர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி வின்சென்ட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வின்சென்ட் தரப்பில் 2002ல் நிலம் வாங்கப்பட்டாதவும், விசாரணையில் ஜஸ்டின் என்பவரால் 2009ல் வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. மேலும், கட்டட திட்ட அனுமதி 2001ம் ஆண்டே வாங்கியது கூட்டு சதியை உறுதி செய்கிறது. அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை செய்யலாம் எனவும், சட்டத்திற்குட்பட்டு எந்த நடவடிக்கையும் வின்சென்ட் மீது எடுக்கலாம் எனவும், நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தடையிடாது எனவும் தெரிவித்து வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய பாமக ராமலிங்கம் கொலை வழக்கு.. 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.