ETV Bharat / state

அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Jaffer sadiq ED Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 8:59 PM IST

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், ஜாஃபர் சாதிக்
சென்னை உயர் நீதிமன்றம், ஜாஃபர் சாதிக் (Image Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், 'போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தது சட்டவிரோதம்' என உத்தரவிடக் கோரி ஜாபர் சாதிக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்டபட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி,
'ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து நீதிமன்றக் காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதோடு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என்று வாதிட்டார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு; மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 'ஜாமின் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திஹார் சிறை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோரலாம். ஆனால் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது' என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஜாமீன் வழங்கிய பின்னர் வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று கருத்து தெரிவித்து, அதற்காக தனியாக நிவாரணம் கோரலாம்' என்று கூறினர்.

அத்துடன், சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், 'போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தது சட்டவிரோதம்' என உத்தரவிடக் கோரி ஜாபர் சாதிக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்டபட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி,
'ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து நீதிமன்றக் காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதோடு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என்று வாதிட்டார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு; மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 'ஜாமின் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திஹார் சிறை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோரலாம். ஆனால் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது' என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஜாமீன் வழங்கிய பின்னர் வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று கருத்து தெரிவித்து, அதற்காக தனியாக நிவாரணம் கோரலாம்' என்று கூறினர்.

அத்துடன், சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.