ETV Bharat / state

ஆட்டோ பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்குதல்.. மதுரை பாஜக வேட்பாளர் கண்டனம்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:21 PM IST

Lok Sabha Election 2024: பாஜக தொண்டர்கள் ஆட்டோ வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தாக்கிய விசிகவினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆட்டோ பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்குதல்
ஆட்டோ பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்குதல்

ஆட்டோ பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்குதல்

மதுரை: மேலூர் பகுதியில் பாஜகவினர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டதால் இருவர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நேற்று மேலூர் பகுதி, எட்டிமங்கலம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தோர், பாஜக தொண்டர்கள் ஆட்டோ வாகன பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெற்று அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பாஜகவினரை வழிமறித்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் ஆதரவோடு விசிகவினர் இது மாதிரியான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் மீனாட்சிசுந்தரம், ராஜபாண்டி என்ற இரண்டு பாஜக தொண்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். விசிகவினர் இந்த வன்முறை போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். இச்செயல் திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: "மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் அமைச்சர் படம்" - பறக்கும் படையினர் அகற்றம்! - Lok Sabha Election 2024

ஆட்டோ பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்குதல்

மதுரை: மேலூர் பகுதியில் பாஜகவினர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டதால் இருவர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நேற்று மேலூர் பகுதி, எட்டிமங்கலம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தோர், பாஜக தொண்டர்கள் ஆட்டோ வாகன பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெற்று அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பாஜகவினரை வழிமறித்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் ஆதரவோடு விசிகவினர் இது மாதிரியான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் மீனாட்சிசுந்தரம், ராஜபாண்டி என்ற இரண்டு பாஜக தொண்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். விசிகவினர் இந்த வன்முறை போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். இச்செயல் திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: "மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் அமைச்சர் படம்" - பறக்கும் படையினர் அகற்றம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.