ETV Bharat / state

அமலாக்கத்துறை வழக்கு; ஜாபர் சாதிக் கைது மீதான உத்தரவு தள்ளிவைப்பு! - jaffer sadiq case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 4:21 PM IST

Jaffer Sadiq ED arrest case: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம், ஜாபர் சாதிக்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஜாபர் சாதிக் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறை கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்தது. இந்த நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.

ஜாபர் சாதிக் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்கான உத்தரவு மற்றும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், ''சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் 24 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மேலும், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் சிறை வாரண்ட் மூலமாக மீண்டும் கைது செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது சட்ட விரோதமானது. எனவே, தற்போது உள்ள நிலையில் அவருடைய கைதுக்கு அனுமதிக்க க்கூடாது. இந்த கைது சட்டவிரோதமானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, நீதிமன்றக் காவலுக்கு உற்படுத்தக்கூடாது'' என வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்று என்.ரமேஷ், ''அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றியே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை வாரண்ட் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றுள்ளது.

''ஜாபர் சாதிக் கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கிடம் வழங்கபட்டது. மேலும், கைதுக்கான அனைத்து காரணங்களும் வழங்கி மனுதாரர் கையொப்பம் பெறப்பட்டது. எனவே, எப்படி சட்டவிரோத கைது என்ற கேள்வி எழுகிறது'' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் ஜாபர் சாதிக் கைது மீதான உத்தரவை நீதிபதி அல்லி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் பீகார் பக்தர் மீது பணியாளர்கள் தாக்குதல் என புகார்

சென்னை: வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறை கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்தது. இந்த நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.

ஜாபர் சாதிக் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்கான உத்தரவு மற்றும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், ''சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் 24 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மேலும், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் சிறை வாரண்ட் மூலமாக மீண்டும் கைது செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது சட்ட விரோதமானது. எனவே, தற்போது உள்ள நிலையில் அவருடைய கைதுக்கு அனுமதிக்க க்கூடாது. இந்த கைது சட்டவிரோதமானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, நீதிமன்றக் காவலுக்கு உற்படுத்தக்கூடாது'' என வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்று என்.ரமேஷ், ''அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றியே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை வாரண்ட் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றுள்ளது.

''ஜாபர் சாதிக் கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கிடம் வழங்கபட்டது. மேலும், கைதுக்கான அனைத்து காரணங்களும் வழங்கி மனுதாரர் கையொப்பம் பெறப்பட்டது. எனவே, எப்படி சட்டவிரோத கைது என்ற கேள்வி எழுகிறது'' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் ஜாபர் சாதிக் கைது மீதான உத்தரவை நீதிபதி அல்லி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் பீகார் பக்தர் மீது பணியாளர்கள் தாக்குதல் என புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.