ETV Bharat / state

பழனி கிரிவலப்பாதை; அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு! - Palani Murgan Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 4:07 PM IST

Updated : Sep 2, 2024, 5:08 PM IST

Palani Murgan Temple: பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களிலும், கிரிவலப்பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுமார் 200க்கும் அதிகமான ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கிரிவலப்பாதையில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், விஜயன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுமார் 100 ஆண்டுகளாக அங்கேயே கடை நடத்தி வருவதாகவும், வருவாய் ஆவணங்களின் படி, அந்த இடத்திற்கான பட்டா தன்னிடம் இருப்பதால் தன்னை அப்புறப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "வருவாய் ஆவணங்களின் படி, நிலத்துக்கு உரிமை உள்ளதால் என்னை அப்புறப்படுத்தக் கூடாது. கிரிவலப்பாதையில் எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ளவில்லை. கடையும் நடத்தவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

தேவஸ்தானம் தரப்பில், "அண்ணா செட்டிமடம் அருகே விஜயன் நிலம் உள்ளது. கடைகள் மற்றும் புதிய கட்டுமானங்களை மேற்கோண்டு வருகிறார். கோயில் நிலத்தில் யாரும் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. ஆவணங்களின் படி அவருக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில் நிலத்தில் எப்படி கடை நடத்த முடியும்? கிரிவலப் பாதையில் கடைகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும். கடைகள் செயல்பட்டால், அதை உடனே மூட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் நிலம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், ஆவணங்களின் படி, மனுதாரரின் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : ”பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது” - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Vinayagar Chaturthi 2024

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களிலும், கிரிவலப்பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுமார் 200க்கும் அதிகமான ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கிரிவலப்பாதையில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், விஜயன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுமார் 100 ஆண்டுகளாக அங்கேயே கடை நடத்தி வருவதாகவும், வருவாய் ஆவணங்களின் படி, அந்த இடத்திற்கான பட்டா தன்னிடம் இருப்பதால் தன்னை அப்புறப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "வருவாய் ஆவணங்களின் படி, நிலத்துக்கு உரிமை உள்ளதால் என்னை அப்புறப்படுத்தக் கூடாது. கிரிவலப்பாதையில் எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ளவில்லை. கடையும் நடத்தவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

தேவஸ்தானம் தரப்பில், "அண்ணா செட்டிமடம் அருகே விஜயன் நிலம் உள்ளது. கடைகள் மற்றும் புதிய கட்டுமானங்களை மேற்கோண்டு வருகிறார். கோயில் நிலத்தில் யாரும் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. ஆவணங்களின் படி அவருக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில் நிலத்தில் எப்படி கடை நடத்த முடியும்? கிரிவலப் பாதையில் கடைகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும். கடைகள் செயல்பட்டால், அதை உடனே மூட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் நிலம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், ஆவணங்களின் படி, மனுதாரரின் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : ”பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது” - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Vinayagar Chaturthi 2024

Last Updated : Sep 2, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.