ETV Bharat / state

அன்று கல்லிலே கலை வண்ணம்.. இன்று நூலிழையில் கைவண்ணம்... 'ஸ்ட்ரிங் ஆர்டில்' கலக்கும் சட்டக் கல்லூரி மாணவன்! - String Art Portrait

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:55 PM IST

Updated : Aug 6, 2024, 10:56 PM IST

String Art: சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே 'ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட்' கலையின் மூலம் வருமானம் ஈட்டி கலைத்துறையில் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் குறித்த சிறப்புத் தொகுப்பு.

தரணி குமார் மற்றும் ஸ்ட்ரிங் ஆர்ட் ஓவியம்
தரணி குமார் மற்றும் ஸ்ட்ரிங் ஆர்ட் ஓவியம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற முதுமொழி ஒன்று உள்ளது. அதனை வெளிக்கொணரும் விதமாக படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று இல்லாமல் ஏதேனும் கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றனர் இன்றைய தலைமுறை இளைஞர்கள்.

தரணி குமார் மற்றும் ஸ்ட்ரிங் ஆர்ட் ஓவியம் (Video Credit - ETV Bharat)

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தரணி குமார் (21) என்ற கல்லூரி மாணவர் நூலை வைத்து செய்யக்கூடிய ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் (String Art Portrait) என்னும் கலையின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார், தரணி குமார் மத்திய சட்டக் கல்லூரி சேலத்தில் பி.ஏ., எல்எல்பி இறுதியாண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் ஆர்டர் பெறப்பட்ட நபர்களுக்கு ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலையின் மூலம் ஓவியம் செய்து அதை விற்று வருமானமும் ஈட்டி வருகிறார். இந்த வருமானத்தை தனது படிப்பு செலவுக்கும், தனது குடும்பத்தில் உள்ள சிறுசிறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதுகுறித்து ஸ்ட்ரிங் ஆர்ட் கலைஞர் தரணி குமார் கூறுகையில், "ஸ்ட்ரிங் ஆர்ட் என்பது நூலைக் கொண்டு பிளைவுட் பலகையில் 300க்கும் மேற்பட்ட சிறிய ஆணிகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிச்சுகளை குறுக்கும் நெடுக்குமாக புகைப்படத்திற்கு ஏற்ப கட்டி ஓவியம் அமைப்பதாகும்.

இவை 30×30 என்ற அளவில் உள்ள பிளைவுட் பலகையில் செய்யப்படுகிறது. நூல் இழை அறுந்துவிடாமல் மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான கலை வேலைபாடுகளை கொண்டதாக இந்த ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலை உள்ளது. அந்த வகையில், இந்த கலை வேலைபாடுகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஆகும்.

மேலும், வாடிக்கையாளர் விரும்பிய புகைப்படங்களை கொடுத்தவுடன் கம்ப்யூட்டர் டிசைன் செய்து அதை புரோக்ராம் செய்து அதற்கு தகுந்தாற்போல் ஆர்ட் வேலை செய்யப்படுகிறது. இந்த கலை வேலைப்பாடுகளை கடந்த 2 வருடமாக செய்து பல்வேறு நபர்களுக்கும் பரிசு பொருளாக செய்து கொடுத்துள்ளேன்.

அதில் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றாக இருப்பதுபோல படத்தை ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட்டாக செய்து, அதனை மேயர் ராமநாதனுக்கு பரிசாக அண்மையில் வழங்கியுள்ளேன்.

மிகவும் சிக்கலாகவும் மற்றும் நுட்பமாகவும் செய்யப்படும் இந்த கலையை நான் கற்றுக்கொள்ளும் ஆரம்ப காலகட்டத்தில், அதிகமான தோல்விகளை சந்தித்து மீண்டும் மீண்டும் முயற்சிகளை கைவிடாது தொடர்ச்சியாக செய்தது மூலமாக தற்போது இந்த கலையை வெற்றிகரமாக செய்து வருகிறேன்.

இதுமட்டும் அல்லாது, எனது அப்பா மற்றும் அம்மா எனக்கு கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்" என்று மகிழ்ச்சிபொங்க கூறினார் கலைஞர் தரணி குமார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எண்ணூரில் தொங்கலில் கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்..பராமரிக்க தவறியதா காவல்துறை? - வாகன ஓட்டிகள் கூறுவது என்ன?

தஞ்சாவூர்: 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற முதுமொழி ஒன்று உள்ளது. அதனை வெளிக்கொணரும் விதமாக படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று இல்லாமல் ஏதேனும் கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றனர் இன்றைய தலைமுறை இளைஞர்கள்.

தரணி குமார் மற்றும் ஸ்ட்ரிங் ஆர்ட் ஓவியம் (Video Credit - ETV Bharat)

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தரணி குமார் (21) என்ற கல்லூரி மாணவர் நூலை வைத்து செய்யக்கூடிய ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் (String Art Portrait) என்னும் கலையின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார், தரணி குமார் மத்திய சட்டக் கல்லூரி சேலத்தில் பி.ஏ., எல்எல்பி இறுதியாண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் ஆர்டர் பெறப்பட்ட நபர்களுக்கு ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலையின் மூலம் ஓவியம் செய்து அதை விற்று வருமானமும் ஈட்டி வருகிறார். இந்த வருமானத்தை தனது படிப்பு செலவுக்கும், தனது குடும்பத்தில் உள்ள சிறுசிறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதுகுறித்து ஸ்ட்ரிங் ஆர்ட் கலைஞர் தரணி குமார் கூறுகையில், "ஸ்ட்ரிங் ஆர்ட் என்பது நூலைக் கொண்டு பிளைவுட் பலகையில் 300க்கும் மேற்பட்ட சிறிய ஆணிகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிச்சுகளை குறுக்கும் நெடுக்குமாக புகைப்படத்திற்கு ஏற்ப கட்டி ஓவியம் அமைப்பதாகும்.

இவை 30×30 என்ற அளவில் உள்ள பிளைவுட் பலகையில் செய்யப்படுகிறது. நூல் இழை அறுந்துவிடாமல் மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான கலை வேலைபாடுகளை கொண்டதாக இந்த ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலை உள்ளது. அந்த வகையில், இந்த கலை வேலைபாடுகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஆகும்.

மேலும், வாடிக்கையாளர் விரும்பிய புகைப்படங்களை கொடுத்தவுடன் கம்ப்யூட்டர் டிசைன் செய்து அதை புரோக்ராம் செய்து அதற்கு தகுந்தாற்போல் ஆர்ட் வேலை செய்யப்படுகிறது. இந்த கலை வேலைப்பாடுகளை கடந்த 2 வருடமாக செய்து பல்வேறு நபர்களுக்கும் பரிசு பொருளாக செய்து கொடுத்துள்ளேன்.

அதில் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றாக இருப்பதுபோல படத்தை ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட்டாக செய்து, அதனை மேயர் ராமநாதனுக்கு பரிசாக அண்மையில் வழங்கியுள்ளேன்.

மிகவும் சிக்கலாகவும் மற்றும் நுட்பமாகவும் செய்யப்படும் இந்த கலையை நான் கற்றுக்கொள்ளும் ஆரம்ப காலகட்டத்தில், அதிகமான தோல்விகளை சந்தித்து மீண்டும் மீண்டும் முயற்சிகளை கைவிடாது தொடர்ச்சியாக செய்தது மூலமாக தற்போது இந்த கலையை வெற்றிகரமாக செய்து வருகிறேன்.

இதுமட்டும் அல்லாது, எனது அப்பா மற்றும் அம்மா எனக்கு கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்" என்று மகிழ்ச்சிபொங்க கூறினார் கலைஞர் தரணி குமார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எண்ணூரில் தொங்கலில் கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்..பராமரிக்க தவறியதா காவல்துறை? - வாகன ஓட்டிகள் கூறுவது என்ன?

Last Updated : Aug 6, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.