ETV Bharat / state

தேனி பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

Bhavatharini Last rites at theni: உடல்நலக்குறைவால் மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி லோயர் கேம்ப் பகுதியில் பண்ணை வீட்டில் திரைத்துறையினர், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 1:08 PM IST

Updated : Jan 27, 2024, 1:50 PM IST

Etv Bharat
Etv Bharat
தேனியில் பவதாரிணி உடல்

தேனி: இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான 'பவதாரிணி' புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜன.25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடலை அவரது சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை எடுத்துச் செல்லப்பட்ட உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி லோயர் கேம்பிற்கு காலை 11:00 மணியளவில் கொண்டுவரப்பட்டது. இளையராஜாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திரளாக அங்கு கூடியுள்ளதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இளையராஜவின் தாயார் சின்னத்தாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது சமாதிகளுக்கு நடுவே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து யவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் குடும்பத்துடன் வந்துள்ளனர். பிரேம் ஜி, ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பிரபலங்களும் பண்ணை வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, இளையராஜாவின் பண்ணை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடலு இயக்குனர் பாரதிராஜா பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தார்.

பின்னர், அங்கு பவதாரிணியின் உடலைப் பார்த்து ஒரு நிமிடம் கலங்கி நின்று கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும், திரைத்துறையினரை சேர்ந்தவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தப்பட உள்ள நிலையில், மாலையில் அவரது உடல் இறுதிச் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் நினைவிடம் நடுவே பவதாரிணியின் உடல் அடக்கம்: கூடலூர் அருகே ஏற்பாடுகள்!

தேனியில் பவதாரிணி உடல்

தேனி: இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான 'பவதாரிணி' புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜன.25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடலை அவரது சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை எடுத்துச் செல்லப்பட்ட உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி லோயர் கேம்பிற்கு காலை 11:00 மணியளவில் கொண்டுவரப்பட்டது. இளையராஜாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திரளாக அங்கு கூடியுள்ளதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இளையராஜவின் தாயார் சின்னத்தாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது சமாதிகளுக்கு நடுவே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து யவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் குடும்பத்துடன் வந்துள்ளனர். பிரேம் ஜி, ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பிரபலங்களும் பண்ணை வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, இளையராஜாவின் பண்ணை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடலு இயக்குனர் பாரதிராஜா பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தார்.

பின்னர், அங்கு பவதாரிணியின் உடலைப் பார்த்து ஒரு நிமிடம் கலங்கி நின்று கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும், திரைத்துறையினரை சேர்ந்தவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தப்பட உள்ள நிலையில், மாலையில் அவரது உடல் இறுதிச் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் நினைவிடம் நடுவே பவதாரிணியின் உடல் அடக்கம்: கூடலூர் அருகே ஏற்பாடுகள்!

Last Updated : Jan 27, 2024, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.