ETV Bharat / state

ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது! - rtd women inspector case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 5:34 PM IST

RTD Women Inspector Case: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், கைது செய்யப்பட்ட வளையாபதி
உயிரிழந்தவர், கைது செய்யப்பட்ட வளையாபதி (Credits - ETV Bharat Tamil Nadu)

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காலண்டர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கஸ்தூரி காவல் ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து வட்டிக்கு விடுவது, சீட்டு நடத்துவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கஸ்தூரியின் மகன் தற்பொழுது டேராடூன் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

மேலும், கஸ்தூரிக்கு ரியல் எஸ்டேட் வேலைகளில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது கஸ்தூரி சடலமாக இருந்துள்ளார். உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கஸ்தூரியின் உடலில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்காயம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவர்களிடம் இந்த தகவல்களை உறுதிப்படுத்திய போலீசார், கஸ்தூரியின் தொலைபேசியை கைப்பற்றி விசாரணையைத் துவங்கினர். அதில், குறிப்பிட்ட நபர்களிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் கஸ்தூரி பேசியது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. மேலும், வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தற்பொழுது கஸ்தூரி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வளையாபதியை கைது செய்த போலீசார், வீடு விற்பதில் ஏதாவது பிரச்சனை காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், வளையாபதி தனது நண்பர் பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வளையாபதி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல்.. குப்பைத் தொட்டியில் கிடந்த தோட்டாக்கள்.. சென்னை க்ரைம்! - sexual harassment on running train

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காலண்டர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கஸ்தூரி காவல் ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து வட்டிக்கு விடுவது, சீட்டு நடத்துவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கஸ்தூரியின் மகன் தற்பொழுது டேராடூன் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

மேலும், கஸ்தூரிக்கு ரியல் எஸ்டேட் வேலைகளில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது கஸ்தூரி சடலமாக இருந்துள்ளார். உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கஸ்தூரியின் உடலில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்காயம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவர்களிடம் இந்த தகவல்களை உறுதிப்படுத்திய போலீசார், கஸ்தூரியின் தொலைபேசியை கைப்பற்றி விசாரணையைத் துவங்கினர். அதில், குறிப்பிட்ட நபர்களிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் கஸ்தூரி பேசியது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. மேலும், வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தற்பொழுது கஸ்தூரி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வளையாபதியை கைது செய்த போலீசார், வீடு விற்பதில் ஏதாவது பிரச்சனை காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், வளையாபதி தனது நண்பர் பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வளையாபதி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல்.. குப்பைத் தொட்டியில் கிடந்த தோட்டாக்கள்.. சென்னை க்ரைம்! - sexual harassment on running train

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.