ETV Bharat / state

“மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது”.. பாஜக உள்ளிட்ட மனுதாரர் தரப்பு வாதம்! - madras high court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 7:25 PM IST

Kallakurichi Illicit Tragedy: மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது என, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள், பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி மற்றும் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் ஆஜராகி, “மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து கொண்டு வந்து விற்க முடியாது.

ஆனால் போலீசார், அரசியல்வாதிகள் தொடர்பில்லை என அரசு கூறுகிறது என்றனர். மேலும், கடந்த 2022-2023ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆண்டுக்கு 9 கோடி விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதை முறையாக செலவிட்டிருந்தால் நிச்சயமாக எந்த மரணமும் நிகழ்ந்திருக்காது. மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது” என வாதிட்டார். கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், “சம்பவத்துக்குப் பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்பி தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் திரும்பப் பெற்றதற்கு எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

மாநில போலீஸ் தவிர்த்து வேறு அமைப்பு விசாரித்தால் தான் முழுமையான நீதியை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டனர். பின்னர், அரசுத் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: “தமிழ்நாடு அரசுக்கு வெட்கமா இல்லையா?”.. அரசுக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் கடிந்து கொண்டது ஏன்?

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள், பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி மற்றும் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் ஆஜராகி, “மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து கொண்டு வந்து விற்க முடியாது.

ஆனால் போலீசார், அரசியல்வாதிகள் தொடர்பில்லை என அரசு கூறுகிறது என்றனர். மேலும், கடந்த 2022-2023ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆண்டுக்கு 9 கோடி விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதை முறையாக செலவிட்டிருந்தால் நிச்சயமாக எந்த மரணமும் நிகழ்ந்திருக்காது. மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது” என வாதிட்டார். கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், “சம்பவத்துக்குப் பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்பி தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் திரும்பப் பெற்றதற்கு எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

மாநில போலீஸ் தவிர்த்து வேறு அமைப்பு விசாரித்தால் தான் முழுமையான நீதியை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டனர். பின்னர், அரசுத் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: “தமிழ்நாடு அரசுக்கு வெட்கமா இல்லையா?”.. அரசுக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் கடிந்து கொண்டது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.