ETV Bharat / state

விக்கிரவாண்டியில் காந்தி வேடமிட்டு வேட்பு மனுவை தாக்கல்! - VIKRAVANDI BY ELECTION - VIKRAVANDI BY ELECTION

VIKRAVANDI BY ELECTION: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், இதுவரை ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் காந்தி வேடமிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்த வேட்பாளர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சுயேச்சை வேட்பாளர் சி.ரமேஷ்
சுயேச்சை வேட்பாளர் சி.ரமேஷ் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 1:31 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சேலம், திருச்சி, தருமபுரி, கோவை மற்றும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்பாக, சேலம் பகுதியில் இருந்து பத்மராஜன் தனது தேர்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், இதுவரை 242 தேர்தல்களில் எம்.பி, எம்.எல்.ஏ மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பாக 51வது முறையாக தேர்தலில் போட்டியிட தன்னுடைய கழுத்தில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க மாலையுடன், பத்தாயிரம் ரூபாய்க்கான சில்லறைக் காசுகளுடன் தன்னுடைய‌ வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது 44வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியரான ராஜேந்திரன், டிஜிட்டல்மயமான இந்தியா என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் டெபாசிட் தொகையையும் ஏடிஎம் கார்டு மூலமாகவேப் பெற வேண்டும் என்று ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு கையில் தடியுடன் வந்து தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த அன்னூர் சிவா வருகிற 19ஆம் தேதி காலை 11 மணியளவில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மேடையில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சேலம், திருச்சி, தருமபுரி, கோவை மற்றும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்பாக, சேலம் பகுதியில் இருந்து பத்மராஜன் தனது தேர்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், இதுவரை 242 தேர்தல்களில் எம்.பி, எம்.எல்.ஏ மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பாக 51வது முறையாக தேர்தலில் போட்டியிட தன்னுடைய கழுத்தில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க மாலையுடன், பத்தாயிரம் ரூபாய்க்கான சில்லறைக் காசுகளுடன் தன்னுடைய‌ வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது 44வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியரான ராஜேந்திரன், டிஜிட்டல்மயமான இந்தியா என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் டெபாசிட் தொகையையும் ஏடிஎம் கார்டு மூலமாகவேப் பெற வேண்டும் என்று ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு கையில் தடியுடன் வந்து தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த அன்னூர் சிவா வருகிற 19ஆம் தேதி காலை 11 மணியளவில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மேடையில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.