ETV Bharat / state

"கம்ப ராமாயணத்திற்கு இளையராஜா இசை வடிவம் தரவேண்டும்" - அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை! - Kamba Ramayana

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 7:15 PM IST

Kamba Ramayana: தமிழர்களின் வாழ்க்கை முறையை, நெறியை, பண்பாட்டை பறைசாற்றும் இலக்கிய‌ காவியமான கம்பராமாயணத்திற்கும் இசை வடிவம் தர வேண்டும். அப்படி செய்தால் அது இன்னும் மெருகேறி பலகோடி மக்களைச் சென்றடையும் என்று கம்பன் கழகத்தினரிடம் அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை வைத்துள்ளார்.

அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் இளமுருகு முத்து
அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் இளமுருகு முத்து (Credits- ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் 49வது ஆண்டு கம்பன் பெருவிழா நேற்று முன்தினம் (ஜூலை 12) தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு நாளும் கம்பன் புகழ் பாடும் வகையில் மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கவியரங்கம், இசை அரங்கம், நற்றமிழ் முற்றம், கவிதைச்சோலை, வழக்காடு மன்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று கம்பராமாயண இசை அரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அவருடைய சிறப்புரையில், "திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய பக்தி காவியங்களுக்கு இசையமைத்து அவற்றை மக்களிடத்தில் எளிதில் சென்றடையச் செய்யும் வகையில் உயிர் கொடுத்த இளையராஜா, தமிழர்களின் வாழ்க்கை முறையை, நெறியை, பண்பாட்டை பறைசாற்றும் இலக்கிய‌ காவியமான கம்பராமாயணத்திற்கும் இசை வடிவம் தர வேண்டும்.

அப்படிச் செய்தால் அது இன்னும் மெருகேறி பலகோடி மக்களைச் சென்றடையும் என்று கம்பன் கழகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவித்து பேசிய புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார், இந்த கோரிக்கையை இளையராஜாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: "2026-ல் அண்ணாமலை எங்கே போட்டியிட்டாலும் தோல்வியடைவார்" - மாணிக்கம் தாகூர் பேச்சு! - Manickam Tagore

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் 49வது ஆண்டு கம்பன் பெருவிழா நேற்று முன்தினம் (ஜூலை 12) தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு நாளும் கம்பன் புகழ் பாடும் வகையில் மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கவியரங்கம், இசை அரங்கம், நற்றமிழ் முற்றம், கவிதைச்சோலை, வழக்காடு மன்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று கம்பராமாயண இசை அரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அவருடைய சிறப்புரையில், "திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய பக்தி காவியங்களுக்கு இசையமைத்து அவற்றை மக்களிடத்தில் எளிதில் சென்றடையச் செய்யும் வகையில் உயிர் கொடுத்த இளையராஜா, தமிழர்களின் வாழ்க்கை முறையை, நெறியை, பண்பாட்டை பறைசாற்றும் இலக்கிய‌ காவியமான கம்பராமாயணத்திற்கும் இசை வடிவம் தர வேண்டும்.

அப்படிச் செய்தால் அது இன்னும் மெருகேறி பலகோடி மக்களைச் சென்றடையும் என்று கம்பன் கழகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவித்து பேசிய புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார், இந்த கோரிக்கையை இளையராஜாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: "2026-ல் அண்ணாமலை எங்கே போட்டியிட்டாலும் தோல்வியடைவார்" - மாணிக்கம் தாகூர் பேச்சு! - Manickam Tagore

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.