ETV Bharat / state

“கலவரம் பண்ணினால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும்.. நயினார் கொடுத்த பணம் என்ன ஆச்சு?” - வைரல் ஆடியோ சர்ச்சை! - BJP vs Hindu Makkal Katchi AUDIO

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 5:32 PM IST

BJP vs Hindu Makkal Katchi Phone Audio Viral: “கலவரம் பண்ணினால் தான் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற முடியும். நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் என்ன ஆச்சு?” என நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியும், பாஜக மாவட்ட தலைவரும் பேசிக்கொண்ட பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி உடையார் மற்றும் தமிழ்ச்செல்வன் பாஜக புகைப்படம்
இந்து மக்கள் கட்சி உடையார் மற்றும் தமிழ்ச்செல்வன் பாஜக புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், நெல்லை மாவட்ட இந்து முன்னணியின் முன்னாள் செயலாளருமான உடையார், நெல்லை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சி உடையார் மற்றும் தமிழ்ச்செல்வன் பாஜக ஆடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

இதில் பேசிய உடையார், "அவர் இந்து முன்னணி, பிஜேபி தலைவர்களை கடுமையாக விமர்சித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடைபெற்றதாகவும், அதனால் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை பாரதிய ஜனதா கட்சியினர் செலவழிக்காமல் வைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டினார். அதற்கு, நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நயினார் நாகேந்திரன் கட்சிக்காரரைப் பார்த்து ரூபாய் கொடுக்கவில்லை எனவும், அவரது சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு தனி டீமாக அமைத்து அதன் மூலம் தான் பணம் விநியோகம் செய்யப்பட்டது. சொந்தக்காரர்கள் கட்சி உறுப்பினர்களை மதிக்கவில்லை, எனவே தான் பிரச்னை என பதில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்துக்கள் அனைவரும் பைத்தியக்காரர்களாக உள்ளார்கள். கரு நாகராஜன் சரத்குமாருடன் கட்சியில் இருந்தார். இன்றைக்கு அவருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியாக பிஜேபியை அழிக்க முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தை மேடைக்கு அழைக்கவில்லை. 38 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அவரை பிஜேபியினர் புறக்கணித்து விட்டனர் என மனக்குமுறலோடு உடையார் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த பி.ஜே.பி மாவட்ட தலைவர், பாரதிய ஜனதா கட்சியில் கடற்கரைகாரர்களையும், கிறிஸ்தவர்களையும், சிறுபான்மையினரையும் மத்தியில் பணம் கொடுத்து பிரச்சாரம் செய்ய சொல்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள். அதற்கு பதில் பல இந்துக்கள் வாழும் பகுதிகளில் பிஜேபி செல்லவே இல்லை, அங்கு செல்ல வேண்டும் என்பது தான் என் கருத்து என அவர் தெரிவித்தார்.

இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் குத்தாலிங்கம், பாலாஜி ஆகியோர் மடத்துச் சொத்துக்களை ஆட்டையைப் போட்டு உள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் கட்ட மண்ணாக மாறிவிட்டது. தென்காசி குமார் பாண்டியனின் குடும்பத்திற்காக இந்து முன்னணியினர் நாலரை கோடி ரூபாய் பிரித்தார்கள்.

ஆனால், குடும்பத்திற்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ்காரர்கள் ரூபாய் பிரித்து நக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-ல் இது பற்றி கணக்கு கேட்டதினால் என்னைக் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். இந்து முன்னணியினர் ஆர்.எஸ்.எஸ் பார்வையில் தமிழகத்தில் துட்டு (பணம் சம்பாதிப்பு) பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலப் பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகம் என்ன செய்துவிட்டார்? அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் தான் இவர்களெல்லாம் சோர்ந்து போய்விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துட்டு வாங்கிக்கொண்டு ஆள்காட்டி வேலை செய்து பலரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். அர்ஜுன் சம்பத்தை மேடை ஏற்ற மாட்டார்கள்.

பிஜேபியை அழிப்பதில் தான் கேசவ விநாயகம் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் பிஜேபி அழிப்பதில் நம்பர் 1 ஆக உள்ளார். கலவரம் பண்ணினால் தான் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற முடியும் என ஆக்ரோஷமாக இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் உடையார் தெரிவித்துள்ளார். மாநில பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகத்தை பொது மேடையில் நான்தான் செருப்பு கழற்றி அடிப்பேன்" என அவர் இந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியை வெல்லப்போவது யார்? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? - VIKRAVANDI ASSEMBLY bye ELECTION

திருநெல்வேலி: இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், நெல்லை மாவட்ட இந்து முன்னணியின் முன்னாள் செயலாளருமான உடையார், நெல்லை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சி உடையார் மற்றும் தமிழ்ச்செல்வன் பாஜக ஆடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

இதில் பேசிய உடையார், "அவர் இந்து முன்னணி, பிஜேபி தலைவர்களை கடுமையாக விமர்சித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடைபெற்றதாகவும், அதனால் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை பாரதிய ஜனதா கட்சியினர் செலவழிக்காமல் வைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டினார். அதற்கு, நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நயினார் நாகேந்திரன் கட்சிக்காரரைப் பார்த்து ரூபாய் கொடுக்கவில்லை எனவும், அவரது சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு தனி டீமாக அமைத்து அதன் மூலம் தான் பணம் விநியோகம் செய்யப்பட்டது. சொந்தக்காரர்கள் கட்சி உறுப்பினர்களை மதிக்கவில்லை, எனவே தான் பிரச்னை என பதில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்துக்கள் அனைவரும் பைத்தியக்காரர்களாக உள்ளார்கள். கரு நாகராஜன் சரத்குமாருடன் கட்சியில் இருந்தார். இன்றைக்கு அவருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியாக பிஜேபியை அழிக்க முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தை மேடைக்கு அழைக்கவில்லை. 38 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அவரை பிஜேபியினர் புறக்கணித்து விட்டனர் என மனக்குமுறலோடு உடையார் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த பி.ஜே.பி மாவட்ட தலைவர், பாரதிய ஜனதா கட்சியில் கடற்கரைகாரர்களையும், கிறிஸ்தவர்களையும், சிறுபான்மையினரையும் மத்தியில் பணம் கொடுத்து பிரச்சாரம் செய்ய சொல்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள். அதற்கு பதில் பல இந்துக்கள் வாழும் பகுதிகளில் பிஜேபி செல்லவே இல்லை, அங்கு செல்ல வேண்டும் என்பது தான் என் கருத்து என அவர் தெரிவித்தார்.

இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் குத்தாலிங்கம், பாலாஜி ஆகியோர் மடத்துச் சொத்துக்களை ஆட்டையைப் போட்டு உள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் கட்ட மண்ணாக மாறிவிட்டது. தென்காசி குமார் பாண்டியனின் குடும்பத்திற்காக இந்து முன்னணியினர் நாலரை கோடி ரூபாய் பிரித்தார்கள்.

ஆனால், குடும்பத்திற்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ்காரர்கள் ரூபாய் பிரித்து நக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-ல் இது பற்றி கணக்கு கேட்டதினால் என்னைக் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். இந்து முன்னணியினர் ஆர்.எஸ்.எஸ் பார்வையில் தமிழகத்தில் துட்டு (பணம் சம்பாதிப்பு) பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலப் பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகம் என்ன செய்துவிட்டார்? அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் தான் இவர்களெல்லாம் சோர்ந்து போய்விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துட்டு வாங்கிக்கொண்டு ஆள்காட்டி வேலை செய்து பலரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். அர்ஜுன் சம்பத்தை மேடை ஏற்ற மாட்டார்கள்.

பிஜேபியை அழிப்பதில் தான் கேசவ விநாயகம் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் பிஜேபி அழிப்பதில் நம்பர் 1 ஆக உள்ளார். கலவரம் பண்ணினால் தான் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற முடியும் என ஆக்ரோஷமாக இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் உடையார் தெரிவித்துள்ளார். மாநில பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகத்தை பொது மேடையில் நான்தான் செருப்பு கழற்றி அடிப்பேன்" என அவர் இந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியை வெல்லப்போவது யார்? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? - VIKRAVANDI ASSEMBLY bye ELECTION

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.