ETV Bharat / state

“மகளிருக்கு வலது கையில் ரூ.1,000 இடது கையில் மின் கட்டணம் உயர்வா?” - ஜி.கே.வாசன் கேள்வி! - TN electricity bill Tariff Hike

G.k.Vasan: தமிழகத்தில் திமுக அரசு மகளிருக்கு வலது கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு இடது கையில் மின் கட்டணத்தை உயர்த்தி பணத்தை பிடுங்குவது தான் திராவிட மாடலா என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 4:19 PM IST

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்றால் மின் கட்டண உயர்வை ஏற்றி மக்களுக்கு சுமையை ஏற்றியது தான். மின் கட்டண உயர்வு தொழில் முனைவோரை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தலாம் என வாக்குறுதி அளித்த திமுகவின் நிலைப்பாடு என்னவென்று மக்கள் கேட்கிறார்கள்.

மின் கட்டண உயர்வில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, மத்திய அரசை குறை காட்டுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மின் துறையில் வெளிப்படைத்தன்மை தேவை. தமிழகத்தில் திமுக அரசு மகளிருக்கு வலது கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு இடது கையில் மின் கட்டணத்தை உயர்த்தி பணத்தைப் பிடுங்குவது தான் திராவிட மாடலா? மின் துறையின் சீர்கேட்டிற்கும், கடன் சுமைக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்

ஆனால், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஜூலை 22ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் தமாகா தலைவர்களும், தொண்டர்களும் சேர்ந்து மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டி ஆட்சியரிடம் மனு வழங்க உள்ளோம்.

மின் கட்டண இழப்பீட்டை சரி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர, தான்தோன்றித்தனமாக செயல்படக்கூடாது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்டம் போல காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. திமுக அரசின் ஏமாற்று வேலைகளை மக்கள் வெகுநாள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்த கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் பதில் கூறுவேன் என கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் என நம்புகிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மை குற்றவாளி வெளிவர சிபிஐ விசாரணை வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி-யில் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு..விஞ்ஞானி செல்வமூர்த்தி சொல்வது என்ன? - Scientist Selvamurthy

சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்றால் மின் கட்டண உயர்வை ஏற்றி மக்களுக்கு சுமையை ஏற்றியது தான். மின் கட்டண உயர்வு தொழில் முனைவோரை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தலாம் என வாக்குறுதி அளித்த திமுகவின் நிலைப்பாடு என்னவென்று மக்கள் கேட்கிறார்கள்.

மின் கட்டண உயர்வில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, மத்திய அரசை குறை காட்டுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மின் துறையில் வெளிப்படைத்தன்மை தேவை. தமிழகத்தில் திமுக அரசு மகளிருக்கு வலது கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு இடது கையில் மின் கட்டணத்தை உயர்த்தி பணத்தைப் பிடுங்குவது தான் திராவிட மாடலா? மின் துறையின் சீர்கேட்டிற்கும், கடன் சுமைக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்

ஆனால், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஜூலை 22ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் தமாகா தலைவர்களும், தொண்டர்களும் சேர்ந்து மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டி ஆட்சியரிடம் மனு வழங்க உள்ளோம்.

மின் கட்டண இழப்பீட்டை சரி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர, தான்தோன்றித்தனமாக செயல்படக்கூடாது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்டம் போல காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. திமுக அரசின் ஏமாற்று வேலைகளை மக்கள் வெகுநாள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்த கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் பதில் கூறுவேன் என கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் என நம்புகிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மை குற்றவாளி வெளிவர சிபிஐ விசாரணை வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி-யில் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு..விஞ்ஞானி செல்வமூர்த்தி சொல்வது என்ன? - Scientist Selvamurthy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.