ETV Bharat / state

தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் வாபஸ்! - Thoothukudi Fishermen

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 3:03 PM IST

Thoothukudi Fishermen: 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 176 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன.

மீன்பிடி விசைப்படகுகள்
மீன்பிடி விசைப்படகுகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

அதில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் 6 சதவீதம் தான் வட்டம் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகுகளுக்கு எந்த டீசல் பிடிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் டீசல் விலை கணக்கிடப்பட வேண்டும், மடி செட்டப், ஆயில், ஸ்டோர், ஐஸ் மட்டும் தான் பொதுவில் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகில் தொழில் செய்யும் விசைப்படகு ஓட்டுநரை இறக்கி விடும்போது, அந்த ஓட்டுநர் விசைப்படகில் சேரும் முன்னர் தொழிலாளர் சங்கத்தை அணுகி தான் சேர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விசைப்படகு தொழிலாளர்களின் நான்கு அம்ச கோரிக்கைகள் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பொது வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 176 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan case

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

அதில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் 6 சதவீதம் தான் வட்டம் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகுகளுக்கு எந்த டீசல் பிடிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் டீசல் விலை கணக்கிடப்பட வேண்டும், மடி செட்டப், ஆயில், ஸ்டோர், ஐஸ் மட்டும் தான் பொதுவில் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகில் தொழில் செய்யும் விசைப்படகு ஓட்டுநரை இறக்கி விடும்போது, அந்த ஓட்டுநர் விசைப்படகில் சேரும் முன்னர் தொழிலாளர் சங்கத்தை அணுகி தான் சேர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விசைப்படகு தொழிலாளர்களின் நான்கு அம்ச கோரிக்கைகள் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பொது வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 176 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.