ETV Bharat / state

வெளிநாட்டில் மனைவி.. நெல்லையில் தந்தை குடும்பத்துடன் தற்கொலை! - Panagudi family suicide

Tirunelveli Family Suicide: திருநெல்வேலி பணகுடி பகுதியில் வசித்து வரும் ரமேஷ் தனது இரண்டு குழந்தைகள் உடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 7:42 PM IST

ரமேஷ்
ரமேஷ் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வள்ளியூரை அடுத்த பணகுடி அண்ணாநகர் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் ரமேஷ் (41). இவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி உமா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரமேஷின் மனைவி வெளிநாட்டிற்குச் செல்வதற்காக கடன் வாங்கியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த கடனை அடைக்க முடியால் ரமேஷ் தவித்து வந்ததாகவும், மேலும் மனைவியைப் பிரிந்து வருத்ததிலிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று ரமேஷ் அவரது குழந்தைகள் ராபின் (14) மற்றும் காவியா (11) ஆகியோர் உடன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் மூவரும் சடலமாக இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், மூவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் ஆராய்ச்சி மாணவருக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வள்ளியூரை அடுத்த பணகுடி அண்ணாநகர் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் ரமேஷ் (41). இவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி உமா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரமேஷின் மனைவி வெளிநாட்டிற்குச் செல்வதற்காக கடன் வாங்கியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த கடனை அடைக்க முடியால் ரமேஷ் தவித்து வந்ததாகவும், மேலும் மனைவியைப் பிரிந்து வருத்ததிலிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று ரமேஷ் அவரது குழந்தைகள் ராபின் (14) மற்றும் காவியா (11) ஆகியோர் உடன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் மூவரும் சடலமாக இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், மூவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் ஆராய்ச்சி மாணவருக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.