ETV Bharat / state

கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்! - Edappadi Palaniswami

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 4:41 PM IST

Edappadi K. Palaniswami: திமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்கவே திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் மத்தியில் இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா (98), கடந்த ஜூலை 25ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடம்பூர் ராஜூவின் இல்லத்திற்கு சென்று, அவரது தந்தை செல்லையாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், வாகைகுளம் விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கடலூரில் நவநீதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடக்காத நாளே கிடையாது. ஜனவரி 1 முதல் 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது வேதனை அளிக்கிறது.

நேற்று தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி கடை ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக அரசு காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி வைத்திருக்கிறது. கஞ்சா போதையில் ஏற்படுகின்ற கொலைகள் அதிகமாக பார்க்கப்படுகின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் படுகொலை, திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் ஆகிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதி கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், 13 ஆண்டுகள் திமுகவைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக இருந்தார்கள். அப்போது எவ்வளவு நிதி தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்? எவ்வளவு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை கூற வேண்டும்.

திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களது ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. திமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்கவே திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் மத்தியில் இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணம். மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.

எந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்திற்கு கேட்ட நிதியை கொடுத்ததில்லை. அதிமுக ஆட்சியில் சேலத்தில் ரூ.1,000 கோடியில் பிரமாண்ட கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை திறக்காமல் பூட்டி வைத்திருக்கின்றார்கள். கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுத்து வரும் இவர்கள் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஆசியாவில் மிகப்பெரிய பூங்காவாக இது பார்க்கப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது.. முக்கிய புள்ளிகள் சிக்குவது எப்போது?

தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா (98), கடந்த ஜூலை 25ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடம்பூர் ராஜூவின் இல்லத்திற்கு சென்று, அவரது தந்தை செல்லையாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், வாகைகுளம் விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கடலூரில் நவநீதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடக்காத நாளே கிடையாது. ஜனவரி 1 முதல் 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது வேதனை அளிக்கிறது.

நேற்று தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி கடை ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக அரசு காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி வைத்திருக்கிறது. கஞ்சா போதையில் ஏற்படுகின்ற கொலைகள் அதிகமாக பார்க்கப்படுகின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் படுகொலை, திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் ஆகிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதி கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், 13 ஆண்டுகள் திமுகவைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக இருந்தார்கள். அப்போது எவ்வளவு நிதி தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்? எவ்வளவு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை கூற வேண்டும்.

திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களது ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. திமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்கவே திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் மத்தியில் இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணம். மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.

எந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்திற்கு கேட்ட நிதியை கொடுத்ததில்லை. அதிமுக ஆட்சியில் சேலத்தில் ரூ.1,000 கோடியில் பிரமாண்ட கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை திறக்காமல் பூட்டி வைத்திருக்கின்றார்கள். கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுத்து வரும் இவர்கள் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஆசியாவில் மிகப்பெரிய பூங்காவாக இது பார்க்கப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது.. முக்கிய புள்ளிகள் சிக்குவது எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.