ETV Bharat / state

மலை கிராமத்தில் தங்கி மக்களின் குறைகளைக் கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்திய தருமபுரி எம்எல்ஏ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 2:43 PM IST

Updated : Feb 8, 2024, 5:03 PM IST

Dharmapuri MLA Venkateswaran: கோம்பேரி கிராம மக்களின் குறைகளைக் கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுத்த தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், காளிகரம்பு மற்றும் கோம்பேரி பகுதியில் சாலை அமைக்கப்படுவது குறித்து, வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைவில் இப்பகுதிக்கு சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்களின் குறைகளை கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுத்த தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன்
மக்களின் குறைகளை கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுத்த தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன்
மக்களின் குறைகளை கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுத்த தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமம் அருகே, சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில், மலைப் பகுதிகளுக்கு நடுவே பையன்குட்டை, கஜமான் குட்டை, ஒட்டன்கொல்லை, மன்னன் கொல்லை, வாழைமரத்து கொட்டாய் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 100 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 400 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் அப்பகுதிக்கு மக்கள், இதுவரை சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருளில் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அப்பகுதிக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.

இதில் முதற்கட்டமாக, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் மின்விளக்குகள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 20 இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.6) இரவு, மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பின், அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள், நாங்கள் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறோம், அதனை ஏற்பாடு செய்து கொடுங்கள் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.8) காலை, கோம்பேரி பகுதியில் இருந்து பொம்மிடி அருகே உள்ள காளிகரம்பு பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “கோம்பேரி மற்றும் காளிகரம்பு பகுதிக்கு இடையிலுள்ள வனப்பகுதியில், 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்தால் மணலூர், கொப்பகரை, பொம்மிடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் 12 கிலோ மீட்டர் பயணத்தில் தருமபுரிக்கு வர முடியும்.

50 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவலநிலை இருக்காது. மேலும் நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, நார்த்தம்பட்டி பகுதி பொதுமக்கள், இந்த சாலை மூலம் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு எளிதில் சென்றடைந்து, அங்கிருந்து கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பயணம் செய்யலாம்.

இது குறித்து வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் இப்பகுதிக்கு சாலை அமைக்கப்படும். இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் உதவிகள் குறித்து, இரவு முழுவதும் இங்கேயே தங்கி, அவர்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: "இன்னும் 2 வாரங்களில் பாஜக கூட்டணி தானாக அமையும்" - அண்ணாமலை சூசகம்

மக்களின் குறைகளை கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுத்த தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமம் அருகே, சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில், மலைப் பகுதிகளுக்கு நடுவே பையன்குட்டை, கஜமான் குட்டை, ஒட்டன்கொல்லை, மன்னன் கொல்லை, வாழைமரத்து கொட்டாய் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 100 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 400 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் அப்பகுதிக்கு மக்கள், இதுவரை சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருளில் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அப்பகுதிக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.

இதில் முதற்கட்டமாக, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் மின்விளக்குகள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 20 இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.6) இரவு, மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பின், அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள், நாங்கள் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறோம், அதனை ஏற்பாடு செய்து கொடுங்கள் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.8) காலை, கோம்பேரி பகுதியில் இருந்து பொம்மிடி அருகே உள்ள காளிகரம்பு பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “கோம்பேரி மற்றும் காளிகரம்பு பகுதிக்கு இடையிலுள்ள வனப்பகுதியில், 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்தால் மணலூர், கொப்பகரை, பொம்மிடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் 12 கிலோ மீட்டர் பயணத்தில் தருமபுரிக்கு வர முடியும்.

50 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவலநிலை இருக்காது. மேலும் நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, நார்த்தம்பட்டி பகுதி பொதுமக்கள், இந்த சாலை மூலம் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு எளிதில் சென்றடைந்து, அங்கிருந்து கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பயணம் செய்யலாம்.

இது குறித்து வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் இப்பகுதிக்கு சாலை அமைக்கப்படும். இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் உதவிகள் குறித்து, இரவு முழுவதும் இங்கேயே தங்கி, அவர்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: "இன்னும் 2 வாரங்களில் பாஜக கூட்டணி தானாக அமையும்" - அண்ணாமலை சூசகம்

Last Updated : Feb 8, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.