ETV Bharat / state

மாமியாரை குத்திக்கொலை செய்த மருமகள்! அதிர வைக்கும் பின்னணி..

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரியமங்கலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கோப்புப் படம், உயிரிழந்த சம்சத்
கோப்புப் படம், உயிரிழந்த சம்சத் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

திருச்சி: திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலணியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சம்சத் (55). அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

அவருக்கும் ஆயிஷா பேகம் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆயிஷா பேகம் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் இதற்காக மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அரிய மங்கலம் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், நேற்று மாமியார் மருமகள் குடும்பத்தினர் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மாமியார் மருமகள் இடையே தகராறு நிலவி வந்துள்ளதாக தெரிகிறது.

அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் இரு கத்திகளால் குத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டிக்கெட் எடுப்பதில் தகராறு.. ஓடும் பேருந்தில் நடத்துநர் கொலை.. சென்னையில் பரபரப்பு!

இதில் மாமியார் சம்சத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் கொலையாளி மருமகள் மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை காயத்துடன் இருந்ததை கண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரை கண்ட மருமகள் ஆயிஷா மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கைரேகை நிரூபணர்கள் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் சொத்து பிரச்சனையால் மருமகள் மாமியாரை கொலை செய்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டதால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திருச்சி: திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலணியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சம்சத் (55). அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

அவருக்கும் ஆயிஷா பேகம் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆயிஷா பேகம் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் இதற்காக மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அரிய மங்கலம் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், நேற்று மாமியார் மருமகள் குடும்பத்தினர் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மாமியார் மருமகள் இடையே தகராறு நிலவி வந்துள்ளதாக தெரிகிறது.

அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் இரு கத்திகளால் குத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டிக்கெட் எடுப்பதில் தகராறு.. ஓடும் பேருந்தில் நடத்துநர் கொலை.. சென்னையில் பரபரப்பு!

இதில் மாமியார் சம்சத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் கொலையாளி மருமகள் மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை காயத்துடன் இருந்ததை கண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரை கண்ட மருமகள் ஆயிஷா மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கைரேகை நிரூபணர்கள் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் சொத்து பிரச்சனையால் மருமகள் மாமியாரை கொலை செய்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டதால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.