ETV Bharat / state

தமிழகத்துக்கு மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! - FORD MOTOR

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 10:06 AM IST

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்துடனான, தமிழகத்தின் 30 ஆண்டுக்கால உறவைப் புதுப்பிப்பது தொடர்பாகவும், மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்தும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஃபோர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஃபோர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credit - M.K.Stalin 'X' Page)

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் AI தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுமட்டும் அல்லாது, ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதையும் படிங்க: "செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க திட்டம்" - சென்னை மேயர் தகவல்!

அதேபோல, ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் (JABIL) நிறுவனம், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் (Ford Motor) நிறுவனம், சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த தங்களது கார் உற்பத்தியை கடந்த 2022ஆம் ஆண்டுடன் நிறுத்தி விட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது 'X' வலைதளத்தில், "தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் ஆலோசனை நடந்தது. 30 ஆண்டுகளாக தமிழகத்தில் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது" என பதிவிட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் AI தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுமட்டும் அல்லாது, ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதையும் படிங்க: "செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க திட்டம்" - சென்னை மேயர் தகவல்!

அதேபோல, ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் (JABIL) நிறுவனம், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் (Ford Motor) நிறுவனம், சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த தங்களது கார் உற்பத்தியை கடந்த 2022ஆம் ஆண்டுடன் நிறுத்தி விட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது 'X' வலைதளத்தில், "தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் ஆலோசனை நடந்தது. 30 ஆண்டுகளாக தமிழகத்தில் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.