ETV Bharat / state

வயதான தம்பதியின் ரூ.7.5 கோடியை அபேஸ் செய்த வங்கி மேலாளர்.. பாஜக பிரமுகர் கைது! - bank manager fake cheque loot

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:14 PM IST

bank manager loot with fake cheque: மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாயை போலி செக் மூலம் அபகரித்த வங்கியின் மேலாளரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி போன்ற கோப்புப்படம், பத்திரிக்கை செய்தி
வங்கி போன்ற கோப்புப்படம், பத்திரிக்கை செய்தி (credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தேனாம்பேட்டை ரத்னா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரும், அவரது மனைவி பானுமதி என்பவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அடையாறில் உள்ள எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை: இதனைத் தொடந்து, அந்த வங்கியின் மேலாளர் பேட்ரிக் ஹோப்மேன், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியிடம், அவர்கள் அதே வங்கியில் வைப்புத் தொகையில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன்-பானுமதி தம்பதியி, தங்களிடமிருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் கடந்த 2021ஆம் ஆண்டு டெபாசிட் செய்துள்ளனர். அதன்பிறகு ராஜேந்திரன்-பானுமதி தம்பதி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர்.

மோசம் செய்த மேலாளர்: இதை அறிந்த வங்கி மேலாளர் பேட்ரிக், ராஜேந்திரனின் செக்கில் போலியாக கையெழுத்து போட்டு, வைப்புத் தொகையில் இருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பின், அந்த பணத்தை அவரின் (மேலாளரின்) நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை: இதைக் கண்டறிந்த ராஜேந்திரன்-பானுமதி தம்பதியி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேட்ரிக் ஹுக் மேன் பணத்தை கையாடல் செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பேட்ரிக் ஹோமின் நண்பர் ராபர்ட் என்பவருக்கு வங்கிக் கணக்கில் மூன்று கோடியே 70 லட்சம் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கட்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ராபர்ட் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராபர்ட் என்பவர் பாஜக கட்சி நிர்வாகியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தி.நகர் ஹயக்ரீவர் கோயிலில் கைவரிசை.. சத்தீஸ்கர் இளைஞர் கைது!

சென்னை: தேனாம்பேட்டை ரத்னா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரும், அவரது மனைவி பானுமதி என்பவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அடையாறில் உள்ள எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை: இதனைத் தொடந்து, அந்த வங்கியின் மேலாளர் பேட்ரிக் ஹோப்மேன், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியிடம், அவர்கள் அதே வங்கியில் வைப்புத் தொகையில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன்-பானுமதி தம்பதியி, தங்களிடமிருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் கடந்த 2021ஆம் ஆண்டு டெபாசிட் செய்துள்ளனர். அதன்பிறகு ராஜேந்திரன்-பானுமதி தம்பதி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர்.

மோசம் செய்த மேலாளர்: இதை அறிந்த வங்கி மேலாளர் பேட்ரிக், ராஜேந்திரனின் செக்கில் போலியாக கையெழுத்து போட்டு, வைப்புத் தொகையில் இருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பின், அந்த பணத்தை அவரின் (மேலாளரின்) நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை: இதைக் கண்டறிந்த ராஜேந்திரன்-பானுமதி தம்பதியி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேட்ரிக் ஹுக் மேன் பணத்தை கையாடல் செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பேட்ரிக் ஹோமின் நண்பர் ராபர்ட் என்பவருக்கு வங்கிக் கணக்கில் மூன்று கோடியே 70 லட்சம் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கட்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ராபர்ட் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராபர்ட் என்பவர் பாஜக கட்சி நிர்வாகியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தி.நகர் ஹயக்ரீவர் கோயிலில் கைவரிசை.. சத்தீஸ்கர் இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.