ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கியமான சிசிடிவி காட்சி வெளியானது! - Armstrong murder preparation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 5:40 PM IST

Updated : Jul 14, 2024, 6:46 PM IST

Armstrong murder preparation: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்ய கைதாகி உள்ளவர்கள் தயாராகும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகள் தயாராகும் புகைப்படம்
கொலையாளிகள் தயாராகும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற ரவுடி மாதாவரத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் சுற்றிவளைத்து வெட்டும் சிசிடிவி காட்சி வெளியானது.

அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தனர். அதில் ஆம்ஸ்ட்ராங்கைச் சுற்றி வளைத்து ரவுடிகள் கத்தியால் சரமாரியாக வெட்டுவது சிசிடிவி காட்சியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய கொலையாளிகள் தயாராகும் காட்சிகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் வருகின்றனர். இதன் பின்னர் ஒருவர் அவர்களை நோக்கி வருகிறார்.

நான்காம் நபர் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்களிடம் ஒரு பையை வாங்கிச் செல்கிறார். அதில் ஆயுதங்கள் இருக்காலம் என தெரிகிறது. இறுதியாக 5வது நபரும் அங்கு வருகிறார். கும்பலில் ஒருவர் அந்த பகுதி முழுவதையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரிகிறது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் துடிக்கத் துடிக்க வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற ரவுடி மாதாவரத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் சுற்றிவளைத்து வெட்டும் சிசிடிவி காட்சி வெளியானது.

அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தனர். அதில் ஆம்ஸ்ட்ராங்கைச் சுற்றி வளைத்து ரவுடிகள் கத்தியால் சரமாரியாக வெட்டுவது சிசிடிவி காட்சியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய கொலையாளிகள் தயாராகும் காட்சிகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் வருகின்றனர். இதன் பின்னர் ஒருவர் அவர்களை நோக்கி வருகிறார்.

நான்காம் நபர் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்களிடம் ஒரு பையை வாங்கிச் செல்கிறார். அதில் ஆயுதங்கள் இருக்காலம் என தெரிகிறது. இறுதியாக 5வது நபரும் அங்கு வருகிறார். கும்பலில் ஒருவர் அந்த பகுதி முழுவதையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரிகிறது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் துடிக்கத் துடிக்க வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி

Last Updated : Jul 14, 2024, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.