ETV Bharat / state

கார் மோதியதில் முள்வேலியில் தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Woman Police Accident CCTV

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 7:45 PM IST

A Woman Police Injured In Road Accident: கார் மோதி பெண் காவலர் இருசக்கர வாகனத்துடன் முள் வேலியில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய பெண் காவலரின் சிசிடிவி
விபத்தில் சிக்கிய பெண் காவலரின் சிசிடிவி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் பவித்ரா (24). இவர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பவித்ரா எப்போதும் போல இன்று (ஜூலை 17) காவல் நிலையத்தில் பணியை முடித்துவிட்டு ஆவடியில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கம் திருவேற்காடு சாலை வழியாகச் சென்றுள்ளார்.

கார் மோதியதில் முள்வேலியில் தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, சரியாக அயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது வளைவில் எதிரே வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று மோதியதில், காவலர் பவித்ரா அருகே இருந்த முள்வேலியில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய கார், காவலர் பவித்ராவின் பின்னால் வந்த மற்றொரு கார் மற்றும் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது.

இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில், கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக காயமடைந்த காவலர் பவித்ரா, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளாகிய காரை பறிமுதல் செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதனை போக்குவரத்து போலீசார் சீர் செய்தனர்.

இதுமட்டுமல்லாது, இந்த விபத்தில் சிக்கிய பெண் காவலரின் இருசக்கர வாகனம் உட்பட விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் விபத்துக்குள்ளான கார் என இரண்டு கார்கள், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஆகியவை சேதமடைந்துள்ளது.

அயப்பாக்கம் சாலையில் கார் மோதி பெண் காவலர் இருசக்கர வாகனத்துடன் முள் வேலியில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் பவித்ரா (24). இவர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பவித்ரா எப்போதும் போல இன்று (ஜூலை 17) காவல் நிலையத்தில் பணியை முடித்துவிட்டு ஆவடியில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கம் திருவேற்காடு சாலை வழியாகச் சென்றுள்ளார்.

கார் மோதியதில் முள்வேலியில் தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, சரியாக அயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது வளைவில் எதிரே வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று மோதியதில், காவலர் பவித்ரா அருகே இருந்த முள்வேலியில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய கார், காவலர் பவித்ராவின் பின்னால் வந்த மற்றொரு கார் மற்றும் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது.

இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில், கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக காயமடைந்த காவலர் பவித்ரா, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளாகிய காரை பறிமுதல் செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதனை போக்குவரத்து போலீசார் சீர் செய்தனர்.

இதுமட்டுமல்லாது, இந்த விபத்தில் சிக்கிய பெண் காவலரின் இருசக்கர வாகனம் உட்பட விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் விபத்துக்குள்ளான கார் என இரண்டு கார்கள், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஆகியவை சேதமடைந்துள்ளது.

அயப்பாக்கம் சாலையில் கார் மோதி பெண் காவலர் இருசக்கர வாகனத்துடன் முள் வேலியில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.