ETV Bharat / state

திருப்பத்தூரில் சாதிய தாக்குதல்; மகளிடம் பேசியதால் மாற்று சமூக இளைஞரை சரமாரியாக தாக்கிய தந்தை! - youth attack in thirupathur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 7:57 PM IST

Youth Attack In Thirupathur: திருப்பத்தூரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தன் மகளிடம் பேசியதால், அந்த இளைஞரை சிறுமியின் தந்தை மற்றும் தாய்மாமன் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாக்குதலுக்கு ஆளான இளைஞர்
தாக்குதலுக்கு ஆளான இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓர் 17 வயது சிறுமி. இவரிடம் திம்மாம்பேட்டை அடுத்த பாட்டூர் பகுதியில் வசித்துவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அண்ணாமலை (20) என்பவர் நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலை கேட்ரிங் தொழில் செய்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் சிறுமியிடம் பேசக்கூடாது என அவரின் பெற்றோர் அண்ணாமலையிடம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஆக 3) சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் தாய்மாமன் விஜயகுமார் ஆகிய இருவரும் அண்ணாமலையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டரிங் பணி உள்ளதாக கூறி ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிற்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு, குடோனில் அடைத்து வைத்து சக்திவேல் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சிலர் இரும்பு ராடால் அண்ணாமலையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அண்ணாமலை மயங்கியதால், இரண்டு முறை தண்ணீர் தெளித்து எழுப்பி மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் காலணியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பலூர் காவல் துறையினர், இளைஞரை தாக்கிய சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமன் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், இளைஞர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி மனைவியை கொல்வதாக மிரட்டல்.. பதற்றத்தில் அயனாவரம்..! - bsp armstrong family

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓர் 17 வயது சிறுமி. இவரிடம் திம்மாம்பேட்டை அடுத்த பாட்டூர் பகுதியில் வசித்துவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அண்ணாமலை (20) என்பவர் நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலை கேட்ரிங் தொழில் செய்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் சிறுமியிடம் பேசக்கூடாது என அவரின் பெற்றோர் அண்ணாமலையிடம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஆக 3) சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் தாய்மாமன் விஜயகுமார் ஆகிய இருவரும் அண்ணாமலையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டரிங் பணி உள்ளதாக கூறி ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிற்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு, குடோனில் அடைத்து வைத்து சக்திவேல் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சிலர் இரும்பு ராடால் அண்ணாமலையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அண்ணாமலை மயங்கியதால், இரண்டு முறை தண்ணீர் தெளித்து எழுப்பி மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் காலணியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பலூர் காவல் துறையினர், இளைஞரை தாக்கிய சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமன் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், இளைஞர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி மனைவியை கொல்வதாக மிரட்டல்.. பதற்றத்தில் அயனாவரம்..! - bsp armstrong family

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.