ETV Bharat / state

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 7:58 PM IST

Minister Anitha Radhakrishnan case: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் செபடம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி வழக்கு; 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றமான சார்பு நீதிமன்றத்தில், நீதிபதி பிஸ்மிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி பெருமாள் சாமியிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பாக 4 மணி நேரமாக குறுக்கு விசாரணை நடத்தினார். அதன்பின், மாவட்ட நீதிபதி பிஸ்மிதா இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி வழக்கு; 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றமான சார்பு நீதிமன்றத்தில், நீதிபதி பிஸ்மிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி பெருமாள் சாமியிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பாக 4 மணி நேரமாக குறுக்கு விசாரணை நடத்தினார். அதன்பின், மாவட்ட நீதிபதி பிஸ்மிதா இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.