ETV Bharat / state

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை; மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்! - Lawyer murder in chennai

Lawyer murder: சென்னையில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 3:22 PM IST

இறந்த வழக்கறிஞர் கௌதம்
இறந்த வழக்கறிஞர் கௌதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (24), சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கௌதம் நேற்று இரவு திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், கௌதமை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த கௌதமை மீட்டு, அடையார் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம், சில மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் காவல் துறையினர், கௌதமின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பி ஓடிய ஐந்து நபர்களை, தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம் உயிரிழந்த நிலையில், மருத்துவ நிர்வாகம் கௌதமின் உறவினர்களிடம் சிகிச்சை கட்டணத் தொகை 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தான் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கௌதமனின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்பு கௌதமின் உடல் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பா? கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனை முற்றுகை! - youth died wrongful treatment

சென்னை: திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (24), சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கௌதம் நேற்று இரவு திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், கௌதமை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த கௌதமை மீட்டு, அடையார் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம், சில மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் காவல் துறையினர், கௌதமின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பி ஓடிய ஐந்து நபர்களை, தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம் உயிரிழந்த நிலையில், மருத்துவ நிர்வாகம் கௌதமின் உறவினர்களிடம் சிகிச்சை கட்டணத் தொகை 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தான் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கௌதமனின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்பு கௌதமின் உடல் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பா? கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனை முற்றுகை! - youth died wrongful treatment

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.