ETV Bharat / state

"அரசு செய்ய வேண்டியதை நான் செய்து வருகிறேன்" - புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேச்சு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 7:59 PM IST

A.C. Shanmugam: ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் இன்று (பிப்.18) வேலூர் அருகே அரியூர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிறுவனத் தலைவரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
"அரசு செய்ய வேண்டியதை நான் செய்து வருகிறேன்" - புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேச்சு!

வேலூர்: ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று (பிப்.18) வேலூர் அருகே அரியூர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிறுவனத் தலைவரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளை
வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஏ.சி. சண்முகம், "வேலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இதுவரை ஐந்து முகாம்களில் சுமார் 10,250 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஒரு அரசு செய்ய வேண்டியதைத் தனி நபராக ஏசிஎஸ் மருத்துவமனை செய்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் வேலை தேடுவது முக்கியமல்ல. வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களை தங்களுடைய உழைப்பால் உயர்த்த வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனமும் வளர்ச்சி அடையும், நாமும் வளர்ச்சி அடைய முடியும்.

என்னுடைய, 40 ஆண்டுக்கால உழைப்பால் தான் இன்று 18 ஆயிரம் பேருக்கு நான் சம்பளம் வழங்கி வருகிறேன். ஒவ்வொருவருக்கும் உழைப்பு தான் முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். மேலும், வரும் 24ஆம் தேதி கே.வி. குப்பத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதிலும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறலாம். ஆறு தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் வரும் மார்ச் 2ஆம் தேதி வேலூரில் நடைபெறும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி.. ஜெய்ஸ்வாலை ஓவர் டேக் செய்த ஜடேஜா!

"அரசு செய்ய வேண்டியதை நான் செய்து வருகிறேன்" - புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேச்சு!

வேலூர்: ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று (பிப்.18) வேலூர் அருகே அரியூர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிறுவனத் தலைவரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளை
வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஏ.சி. சண்முகம், "வேலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இதுவரை ஐந்து முகாம்களில் சுமார் 10,250 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஒரு அரசு செய்ய வேண்டியதைத் தனி நபராக ஏசிஎஸ் மருத்துவமனை செய்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் வேலை தேடுவது முக்கியமல்ல. வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களை தங்களுடைய உழைப்பால் உயர்த்த வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனமும் வளர்ச்சி அடையும், நாமும் வளர்ச்சி அடைய முடியும்.

என்னுடைய, 40 ஆண்டுக்கால உழைப்பால் தான் இன்று 18 ஆயிரம் பேருக்கு நான் சம்பளம் வழங்கி வருகிறேன். ஒவ்வொருவருக்கும் உழைப்பு தான் முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். மேலும், வரும் 24ஆம் தேதி கே.வி. குப்பத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதிலும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறலாம். ஆறு தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் வரும் மார்ச் 2ஆம் தேதி வேலூரில் நடைபெறும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி.. ஜெய்ஸ்வாலை ஓவர் டேக் செய்த ஜடேஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.