ETV Bharat / state

தேனியில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 12 குழந்தைகளுக்கு காய்ச்சல்.. ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி! - Anaikaraipatti School students sick

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 7:10 PM IST

Anaikkaraipatti Government Primary School: தேனி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் 12 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பால் பள்ளிக்கு வரவில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் சுகாதார ஆய்வாளரும், ஊராட்சித் தலைவரும் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.

பள்ளியில் ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளரும், ஊராட்சித் தலைவரும்
பள்ளியில் ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளரும், ஊராட்சித் தலைவரும் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 57 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி அணைக்கரைப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் அகிலேஷ் (6), அஸ்வின் (5) ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் ஒரு சிறுமிக்கு அம்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை போடி அரசு மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இரு சிறுவர்களும் கடுமையான வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் படித்து வரும் தொடக்கப்பள்ளியில், மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் நேரில் சென்று பள்ளியையும், அங்கன்வாடியையும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படித்து வரும் 13 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் 1 சிறுமிக்கு வீங்கி அம்மை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வரவில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், அணைக்கரைப்பட்டி ஊராட்சித் தலைவர் லோகநாதனிடம் இந்த தகவலை தெரிவித்த நிலையில், இருவரும் சென்று பள்ளியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராதது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் விசாரித்த போது. திடீரென ஆசிரியர்களுக்கும், ஊராட்சித் தலைவர் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தை முறையாக சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளரும், ஊராட்சித் தலைவரும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்துள்ளதாக தெரிகிறது. அப்போது பள்ளித் தலைமை ஆசிரியை மஞ்சுளா, இந்த மாதம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய காய்ச்சல், இருமல் மற்றும் சளி மாத்திரைகளும், டானிக்குகளும் இன்னும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியாக சுகாதார ஆய்வாளர் பள்ளி நிர்வாகத்திடம் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், எங்கும் நீர் தேங்க விடாமல், கொசு உற்பத்தியாகாமல் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், குடிநீர் தேக்கத்தொட்டிகள் குளோரினேசன் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இவ்வாறு ஒரே பள்ளியைச் சேர்ந்த 13 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டு அவதியடையும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை கண்காணித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ரோந்துப்பணி செல்லும்போது கைத்துப்பாக்கி அவசியம்" - காவல்துறையினருக்கு ஏடிஜிபி டேவிட்சன் உத்தரவு!

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 57 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி அணைக்கரைப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் அகிலேஷ் (6), அஸ்வின் (5) ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் ஒரு சிறுமிக்கு அம்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை போடி அரசு மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இரு சிறுவர்களும் கடுமையான வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் படித்து வரும் தொடக்கப்பள்ளியில், மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் நேரில் சென்று பள்ளியையும், அங்கன்வாடியையும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படித்து வரும் 13 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் 1 சிறுமிக்கு வீங்கி அம்மை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வரவில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், அணைக்கரைப்பட்டி ஊராட்சித் தலைவர் லோகநாதனிடம் இந்த தகவலை தெரிவித்த நிலையில், இருவரும் சென்று பள்ளியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராதது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் விசாரித்த போது. திடீரென ஆசிரியர்களுக்கும், ஊராட்சித் தலைவர் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தை முறையாக சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளரும், ஊராட்சித் தலைவரும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்துள்ளதாக தெரிகிறது. அப்போது பள்ளித் தலைமை ஆசிரியை மஞ்சுளா, இந்த மாதம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய காய்ச்சல், இருமல் மற்றும் சளி மாத்திரைகளும், டானிக்குகளும் இன்னும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியாக சுகாதார ஆய்வாளர் பள்ளி நிர்வாகத்திடம் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், எங்கும் நீர் தேங்க விடாமல், கொசு உற்பத்தியாகாமல் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், குடிநீர் தேக்கத்தொட்டிகள் குளோரினேசன் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இவ்வாறு ஒரே பள்ளியைச் சேர்ந்த 13 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டு அவதியடையும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை கண்காணித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ரோந்துப்பணி செல்லும்போது கைத்துப்பாக்கி அவசியம்" - காவல்துறையினருக்கு ஏடிஜிபி டேவிட்சன் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.