சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் இசை, தையல்,ஓவியம், நடனம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கற்றுத் தருவதற்குச் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் 2011ஆம் ஆண்டில் 16,549 பேர் செய்யப்பட்டனர். அவர்களில் தற்பொழுது 10, 359 பேர் பணியிலிருந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தற்போது பணியில் இருப்பவர்கள் 12,105 ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது , தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.