செயின்ட் லூசியா: கிரிக்கெட்டில் புகழ்பெற்ற டிஎல்எஸ் எனப்படும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை உருவாக்கியவர்களில் ஒருவரான பிராங்க் டக்வொர்த் காலமானார். அவருக்கு வயதுஇ 84. வயது மூப்பின் காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட்டில் மழை உள்ளிட்ட பேரிடரால் ஆட்டம் பாதிக்கப்பட்ட போது, ரன் விகிதத்தை துல்லியமாக கணித்து எதிரணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவராவார்.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டக்வொர்த் அணுஆயுத தயாரிப்பு துறையில் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து புள்ளியல் துறையில் பட்டம் பெற்ற அவர், புள்ளியல் நிபுணராகவும் அறியப்படுகிறார். கடந்த 1992 ஆம் ஆண்டு இவரும் லீவிஸ் மற்றூம் ஸ்டீவ் ஸ்ட்ரம் உள்ளிட்டோர் இணைந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை உருவாக்கி உள்ளனர்.
தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஒப்பந்த அடிப்படையிலான புள்ளியல் துறை நிபுணராக பணியாற்றிய இவர், டக்வொர்த் லீவிஸ் முறைய சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தும் அளவுக்கு தேவையான மாற்றங்களை நெறிமுறைப்படுத்தி உள்ளனர். அதன் பின் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் டக்வொர்த் லீவிஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
முன்னதாக கடந்த 1992ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டட்த்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொண்டன. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு டிஎல் முறை கொண்டு ஆராயப்பட்டது. மழைக்கு முன்னதாக 13 பந்துகளில் 22 ரன்கள் தென் ஆப்பிரிக்கா எடுக்க வேண்டி இருந்த நிலையில், டிஎல் முறை கொண்டு கணித்த பின் 1 பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டியது போல் மாறியது.