ETV Bharat / international

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 10:18 PM IST

Updated : Feb 23, 2024, 11:03 PM IST

Kachchatheevu Anthony temple festival: இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கச்சத்தீவு திருவிழா களையிழந்து காணப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு!

இலங்கை: தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அது மட்டுமல்லாது படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்ப்பாணம் பங்குத்தந்தை, இலங்கை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சிலுவைப் பாதையும், தேர் பவனியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் 2வது நாளான நாளை (பிப்.24) காலை கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது.

இதனிடையே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தொடங்கி உள்ள கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்தியா தரப்பில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கச்சத்தீவு திருவிழா களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன? - சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு!

இலங்கை: தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அது மட்டுமல்லாது படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்ப்பாணம் பங்குத்தந்தை, இலங்கை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சிலுவைப் பாதையும், தேர் பவனியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் 2வது நாளான நாளை (பிப்.24) காலை கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது.

இதனிடையே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தொடங்கி உள்ள கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்தியா தரப்பில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கச்சத்தீவு திருவிழா களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன? - சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Last Updated : Feb 23, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.