ETV Bharat / international

சிறையில் இருந்த 50 தமிழக மீனவர்கள் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு! - TN Fishermen Released

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட படகோட்டிகளைத் தவிர மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கொழும்பு (இலங்கை): கடந்த 21ஆம் தேதி மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகை சிறை பிடித்து அதிலிருந்து 37 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மீனவருடைய சிறைகாவல் முடிந்து இன்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணை நடத்திய நீதிபதி 37 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுதலை செய்யப்பட்ட 37 மீனவர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் தாயும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18 மற்றும் 20ஆம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகையும், அதிலிருந்த 18 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையும் படிங்க: இலங்கை செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்..சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா?

இந்த நிலையில் 18 புதுக்கோட்டை மீனவர்களின் சிறைக்காவல் முடிந்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, 13 மீனவர்களை மட்டும் விடுதலை செய்தும், நான்கு படகோட்டிகளுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 4 மில்லியன் இந்தியன் மதிப்பு 40 லட்சம் அபராதமும், ஒருவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் 18 மாத சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கொழும்பு (இலங்கை): கடந்த 21ஆம் தேதி மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகை சிறை பிடித்து அதிலிருந்து 37 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மீனவருடைய சிறைகாவல் முடிந்து இன்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணை நடத்திய நீதிபதி 37 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுதலை செய்யப்பட்ட 37 மீனவர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் தாயும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18 மற்றும் 20ஆம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகையும், அதிலிருந்த 18 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையும் படிங்க: இலங்கை செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்..சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா?

இந்த நிலையில் 18 புதுக்கோட்டை மீனவர்களின் சிறைக்காவல் முடிந்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, 13 மீனவர்களை மட்டும் விடுதலை செய்தும், நான்கு படகோட்டிகளுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 4 மில்லியன் இந்தியன் மதிப்பு 40 லட்சம் அபராதமும், ஒருவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் 18 மாத சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.