ETV Bharat / entertainment

’சூரரைப் போற்று’ திரைப்படம் முன்பு எனக்கு சோதனையான காலகட்டம்... மனம் திறந்த சூர்யா!

Suriya about his Cinema career: நடிகர் சூர்யா தனது திரை வாழ்வில் சோதனையான காலகட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா புகைப்படம்
நடிகர் சூர்யா புகைப்படம் (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

டெல்லி: நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்வில் சோதனை காலத்தை கையாண்ட விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நீங்கள் அப்டேட்டாக இருக்க விரும்புவீர்கள். ஆனால் 5 வருடத்திற்கு ஒருமுறை அந்த குறிப்பிட்ட தலைமுறையின் ரசனை மாறும். இந்த தலைமுறை கஜினி திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இன்று கஜினி, காக்க காக்க திரைப்படம் குறித்து தற்போது பேசிக் கொண்டிருக்க முடியாது.ஆனால் தற்போது காலகட்டத்திற்கு ஏற்றவாறு நான் அப்டேட்டாக இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சூர்யா தனது சோதனையான காலகட்டம் குறித்து பேசுகையில், "எனக்கு சினிமாவில் சூரரைப் போற்று படத்திற்கு முன்பு மிகவும் சோதனையான காலகட்டம். அப்போது பல கேள்விகள் என் மனதில் ஓடும். மீண்டும் எப்படி சினிமாவை நேசிப்பது, எப்படி கேமராவிற்கு முன் சந்தோஷமாக நிற்பது என பல கேள்விகளுக்கு இடையே எனக்கு சுதா கொங்குரா மூலமாக ’சூரரை போற்று’ வாய்ப்பு வந்தது” என்றார்.

மேலும் பேசுகையில், “தற்போது ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வர அவர்கள் கவனம் பெறும் படி வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். வெறும் ஹீரோ, வில்லன் கதைகளாக இல்லாமல் திரைக்கதையில் சிறிய மாற்றம் வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: "இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு"... சூர்யாவிடம் அஜீத் கூறியது என்ன?

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. பின்னர் உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டெல்லி: நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்வில் சோதனை காலத்தை கையாண்ட விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நீங்கள் அப்டேட்டாக இருக்க விரும்புவீர்கள். ஆனால் 5 வருடத்திற்கு ஒருமுறை அந்த குறிப்பிட்ட தலைமுறையின் ரசனை மாறும். இந்த தலைமுறை கஜினி திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இன்று கஜினி, காக்க காக்க திரைப்படம் குறித்து தற்போது பேசிக் கொண்டிருக்க முடியாது.ஆனால் தற்போது காலகட்டத்திற்கு ஏற்றவாறு நான் அப்டேட்டாக இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சூர்யா தனது சோதனையான காலகட்டம் குறித்து பேசுகையில், "எனக்கு சினிமாவில் சூரரைப் போற்று படத்திற்கு முன்பு மிகவும் சோதனையான காலகட்டம். அப்போது பல கேள்விகள் என் மனதில் ஓடும். மீண்டும் எப்படி சினிமாவை நேசிப்பது, எப்படி கேமராவிற்கு முன் சந்தோஷமாக நிற்பது என பல கேள்விகளுக்கு இடையே எனக்கு சுதா கொங்குரா மூலமாக ’சூரரை போற்று’ வாய்ப்பு வந்தது” என்றார்.

மேலும் பேசுகையில், “தற்போது ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வர அவர்கள் கவனம் பெறும் படி வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். வெறும் ஹீரோ, வில்லன் கதைகளாக இல்லாமல் திரைக்கதையில் சிறிய மாற்றம் வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: "இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு"... சூர்யாவிடம் அஜீத் கூறியது என்ன?

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. பின்னர் உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.