ETV Bharat / entertainment

"பாடகியுடன் இணைத்து பேசுவதா?" - மகன்களுக்காக பார்க்கிறேன் என ஜெயம் ரவி ஆவேசம்! - Jayam ravi divorce issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தன்னை பாடகியுடன் இணைத்து பேசுவது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, ஆர்த்தி புகைப்படம்
ஜெயம் ரவி, ஆர்த்தி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எனக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக நடிகர் ஜெயம் ரவி சில குறிப்பிட்ட ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்து இதுகுறித்து செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் ஜெயம் ரவி கூறியதாவது, “எனது விவகாரத்து முடிவு வருத்தம் அளிக்கிறது, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை. இந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரி தான்.

கடந்த மாதமே நீதிமன்றம் சென்றுவிட்டேன். விவாகரத்து குறித்து ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதனை அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வந்தது. எங்கள் வீட்டில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வளவு நடந்த பின்னும் எனக்கு தெரியாது என்று கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இல்லை, எனது மகன்களுடன் தான் இருந்தேன். எனது மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். இந்த பிரச்சனையை சட்டரீதியாக சந்திக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்' படப்பிடிப்பு நிறைவு? டிஜிட்டல் உரிமம் விற்பனையில் சாதனை!

மேலும் என்னை கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசுவது தவறு, அவருக்கு பெற்றோர்கள் இல்லை. அந்த பெண் மனநல மருத்துவர். அவருடன் என்னை இணைத்து பேசுவது மிகவும் தவறு. அவருடன் இணைந்து ஒரு ஹீலிங் சென்டர் தொடங்க உள்ளேன். அதனை தடுக்க இப்படி பேசுகிறார்கள். எனது மூத்த மகனிடம் நோட்டீஸ் அனுப்பும் முன்பே விவாகரத்து குறித்து பேசிவிட்டேன். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த எனது இமேஜை அவ்வளவு சுலபமாக உடைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எனக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக நடிகர் ஜெயம் ரவி சில குறிப்பிட்ட ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்து இதுகுறித்து செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் ஜெயம் ரவி கூறியதாவது, “எனது விவகாரத்து முடிவு வருத்தம் அளிக்கிறது, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை. இந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரி தான்.

கடந்த மாதமே நீதிமன்றம் சென்றுவிட்டேன். விவாகரத்து குறித்து ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதனை அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வந்தது. எங்கள் வீட்டில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வளவு நடந்த பின்னும் எனக்கு தெரியாது என்று கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இல்லை, எனது மகன்களுடன் தான் இருந்தேன். எனது மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். இந்த பிரச்சனையை சட்டரீதியாக சந்திக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்' படப்பிடிப்பு நிறைவு? டிஜிட்டல் உரிமம் விற்பனையில் சாதனை!

மேலும் என்னை கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசுவது தவறு, அவருக்கு பெற்றோர்கள் இல்லை. அந்த பெண் மனநல மருத்துவர். அவருடன் என்னை இணைத்து பேசுவது மிகவும் தவறு. அவருடன் இணைந்து ஒரு ஹீலிங் சென்டர் தொடங்க உள்ளேன். அதனை தடுக்க இப்படி பேசுகிறார்கள். எனது மூத்த மகனிடம் நோட்டீஸ் அனுப்பும் முன்பே விவாகரத்து குறித்து பேசிவிட்டேன். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த எனது இமேஜை அவ்வளவு சுலபமாக உடைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.